lorry strike: கர்நாடகாவில் 6 லட்சம் லாரிகள் ஸ்டிரைக் எதிரொலி.. அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் - மக்கள் அவதி!
கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஏப்ரல் 14 நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கி உள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தை கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கம் முன்னெடுத்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் என்ன?
டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது.
6 லட்சம் லாரிகள் ஓடவில்லை
வேலைநிறுத்தம் குறித்து பேசிய அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா, "சுமார் ஆறு லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற லாரி உரிமையாளர்கள் ஏப்ரல் 14-ம் தேதி வரை மாநில அரசுக்கு கெடு விதித்திருந்தனர். ஆனால் இந்த நாட்களில் அரசு எந்த மாற்றமும் செய்யாததால் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
