ஜூலை முதல் தட்கல் டிக்கெட் விதிகளில் அதிரடி மாற்றம்! இந்திய ரயில்வேயின் புதிய கட்டுப்பாடுகள் என்ன?
ஏஜெண்டுகள் மற்றும் போட்கள் மூலம் தட்கல் டிக்கெட்டுகள் மாயமாவதாக பயணிகள் புகார் அளித்த நிலையில் டிக்கெட் புக்கிங்கிற்கு புதிய விதிகளை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

ஜூலை முதல் தட்கல் டிக்கெட் விதிகளில் அதிரடி மாற்றம்! இந்திய ரயில்வேயின் புதிய கட்டுப்பாடுகள் என்ன? (Hindustan Times)
இந்திய ரயில்வே ஜூலை 1 முதல் தட்கல் பிரிவின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகளுக்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த விதிகள் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவை எளிதாக்கும் மற்றும் மோசடியைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புகார்களும் மாற்றங்களும்
ஏஜெண்டுகள் மற்றும் போட்கள் மூலம் டிக்கெட்டுகள் அதிகளவில் புக் செய்யப்படுவதால் சாதாரண பயணிகளால் டிக்கெட்டுகளை பெற முடியவில்லை என்ற புகார் அதிகளவில் எழுந்த நிலையில், இந்த புதிய விதிகள் வந்துள்ளன. இருப்பினும், விதிகளில் உள்ள மாற்றங்கள் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்குமா, மேலும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குமா என்பது நடைமுறைக்கு வந்த பின்னே தெரியும்.