'பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய தாக்குதல்.. பொற்கோயிலை குறிவைத்த பாகிஸ்தான் படைகள்’: இந்திய ராணுவ அதிகாரி தகவல்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  'பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய தாக்குதல்.. பொற்கோயிலை குறிவைத்த பாகிஸ்தான் படைகள்’: இந்திய ராணுவ அதிகாரி தகவல்!

'பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய தாக்குதல்.. பொற்கோயிலை குறிவைத்த பாகிஸ்தான் படைகள்’: இந்திய ராணுவ அதிகாரி தகவல்!

Marimuthu M HT Tamil Published May 19, 2025 05:07 PM IST
Marimuthu M HT Tamil
Published May 19, 2025 05:07 PM IST

மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி, இந்தியா இதுபோன்ற பதிலடியை எதிர்பார்த்ததாகவும், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு வரும் அனைத்து அச்சுறுத்தல்களையும் தடுத்ததாகவும் உறுதிப்படுத்தினார்.

'பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய தாக்குதல்.. பொற்கோயிலை குறிவைத்த பாகிஸ்தான் படைகள்’: இந்திய ராணுவ அதிகாரி பதில்!
'பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய தாக்குதல்.. பொற்கோயிலை குறிவைத்த பாகிஸ்தான் படைகள்’: இந்திய ராணுவ அதிகாரி பதில்!

பாகிஸ்தானுக்கு முறையான இராணுவ இலக்குகள் எதுவும் இல்லை என்றும், இந்தியாவில் உள்ள பொதுமக்கள் மற்றும் மதத் தளங்களைத் தாக்க முயன்றதாகவும் இந்திய ராணுவ மூத்த அதிகாரி கூறினார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், "பாகிஸ்தான் இராணுவத்திற்கு எந்த முறையான இலக்குகளும் இல்லை என்பதை அறிந்திருந்தும், அவர்கள் இந்திய இராணுவ நிறுவல்கள், மத வழிபாட்டுத்தலங்கள் உட்பட பொதுமக்கள் இலக்குகளை குறிவைப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்," என்று அவர் ஏ.என்.ஐ செய்திமுகமையிடம் கூறினார். "இவற்றில், பொற்கோயில் மிக முக்கியமானதாகத் தோன்றியது," என்று அவர் மேலும் கூறினார்.

’பொற்கோயிலை குறிவைத்து தாக்கப்பட்ட அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தினர்’: மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி

"பொற்கோயிலுக்கு முழுமையான வான் பாதுகாப்பினை வழங்க கூடுதல் நவீன வான் பாதுகாப்பு சொத்துக்களை நாங்கள் திரட்டினோம்" என்று மேஜர் ஜெனரல் கார்த்திக் சேஷாத்ரி கூறினார்.

கடந்த மே 8ஆம் தேதி அதிகாலையில் தாக்குதல் நடந்தது. இருளின் மறைவின் கீழ் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியது.

"மே 8 ஆம் தேதி அதிகாலையில், இருள் சூழ்ந்த நேரத்தில், பாகிஸ்தான் ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது," என்று அவர் கூறினார்.

அப்போது, இந்திய இராணுவம் முழுமையாகத் தயாராக இருந்தது என்றும், இதனால் அனைத்து அச்சுறுத்தல்களையும் தடுத்து அழித்தது என்றும் அந்த நினைவுகளை கார்த்திக் சேஷாத்திரி பகிர்ந்தார்.

இதுதொடர்பாகப் பேசிய அவர், "நாங்கள் இதை எதிர்பார்த்ததால் முழுமையாக தயாராக இருந்தோம். துணிச்சலான மற்றும் விழிப்புடன் இருக்கும் இராணுவத்தின் வான் பாதுகாப்பிற்கான துப்பாக்கி ஏந்தியவர்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் தீய திட்டங்களை முறியடித்து, பொற்கோயிலை குறிவைத்து தாக்கப்பட்ட அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தினர். இதனால், நமது புனித பொற்கோயிலில் ஒரு கீறல் கூட வர அனுமதிக்கவில்லை," என்று அந்த அதிகாரி கார்த்திக் ஷேஷாத்திரி மேலும் கூறினார்.

தடுத்து நிறுத்தப்பட்ட தாக்குதல்கள்:

இந்திய ராணுவம், அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் - AKASH ஏவுகணை அமைப்பு மற்றும் L-70 வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் - பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து நடுநிலையாக்கி, பொற்கோயிலையும் பஞ்சாப் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களையும் எவ்வாறு பாதுகாத்தது என்பதைக் காண்பிக்கும் ஒரு செயல் விளக்கத்தையும் நடத்தியது.

அமிர்தசரஸ், ஜம்மு, ஸ்ரீநகர், பதான்கோட், ஜலந்தர், லூதியானா, சண்டிகர் மற்றும் பூஜ் உள்ளிட்ட பல இந்திய நகரங்கள் மற்றும் இராணுவ தளங்கள் இரவு நேரத் தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக அறிக்கை முன்னதாக உறுதிப்படுத்தியது. காஷ்மீர் முழுவதும் வெடிச்சத்தங்களும் கேட்டன.

"இவை ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்புகளால் நடுநிலையாக்கப்பட்டன" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியாவின் ஒருங்கிணைந்த இராணுவத் தாக்குதலான சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடந்தன. ஏப்ரல் 22அன்று பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை நடத்தப்பட்டது.