ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்.. இதுவரை 5 தீவிரவாதிகள் கதையை முடித்த இந்திய ராணுவம் - முழு விவரம்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்.. இதுவரை 5 தீவிரவாதிகள் கதையை முடித்த இந்திய ராணுவம் - முழு விவரம்

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்.. இதுவரை 5 தீவிரவாதிகள் கதையை முடித்த இந்திய ராணுவம் - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 10, 2025 02:52 PM IST

ஆபரேஷன் சிந்தூர் திட்டம் படி கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத நிலைகளை இந்தியா திடீர் துல்லியத் தாக்குதல்களில் குறிவைத்தது

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்.. இதுவரை 5 தீவிரவாதிகள் கதையை முடித்த இந்திய ராணுவம்
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்.. இதுவரை 5 தீவிரவாதிகள் கதையை முடித்த இந்திய ராணுவம் (Representational/REUTERS)

ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ், ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாதத் தாக்குதலில் இறந்த மக்களின் மரணத்துக்குப் பதிவடி தரும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத நிலைகளை இந்தியா திடீர் துல்லியத் தாக்குதல்களில் குறிவைத்தது.

மே 7ஆம் தேதி நடந்த இந்த தாக்குதல்களில் பயங்கரவாதிகளில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ தாக்குதலில் பலியான தீவிரவாதிகள் விவரம் இதோ

1. முடாசர் காதியன் காஸ் அல்லது முடாசர் அல்லது அபு ஜுண்டால்

இணைப்பு: லஷ்கர்-இ-தைபா

• மர்காஸ் தைபாவின் பொறுப்பாளர், முரிட்கே.

• அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் இராணுவத்தால் மரியாதைக்குரிய அணிவகுப்பு வழங்கப்பட்டது.

• பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மற்றும் பாகிஸ்தான் மாகாணமான பஞ்சாப் முதல்வர் (மர்யம் நவாஸ்) சார்பாக மலர்வளையம் வைக்கப்பட்டது.

• அவரது இறுதிச் சடங்கு ஒரு அரசுப் பள்ளியில் நடைபெற்றது, இதற்கு JuD-யின் ஹபீஸ் அப்துல் ரவூஃப் (உலகளாவிய பயங்கரவாதி) தலைமை தாங்கினார்.

• பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றும் லெப்டினன்ட் ஜெனரலும் பஞ்சாப் காவல்துறையின் IG-யும் இறுதி சங்குக்கான பிரா்த்தனையில் கலந்து கொண்டனர்.

2. ஹபீஸ் முகமது ஜமீல்

இணைப்பு: ஜெய்ஷ்-இ-முகமது

• மௌலானா மசூத் அசாரின் மூத்த மைத்துனர்.

• பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லாவின் பொறுப்பாளர்.

• இளைஞர்களை தீவிரவாதக் கற்பித்தல் மற்றும் JeM-க்காக நிதி திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

3. முகமது யூசுப் அசார் அல்லது உஸ்தாத் ஜி அல்லது முகமது சலீம் அல்லது கோசி சஹாப்

இணைப்பு: ஜெய்ஷ்-இ-முகமது

• மௌலானா மசூத் அசாரின் மைத்துனர்.

• JeM-க்காக ஆயுதப் பயிற்சியைக் கையாண்டார்.

• ஜம்மு & காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்.

• IC-814 விமானக் கடத்தல் வழக்கில் தேடப்படும் நபர்.

4. காலித் என்கிற அபு ஆகாஷா

தொடர்பு: லஷ்கர்-இ-தொய்பா

• ஜம்மு & காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்.

• ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர்.

• பாகிஸ்தான் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் பைசலாபாத் துணை ஆணையர் கலந்து கொண்ட பைசலாபாத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

5. முகமது ஹசன் கான்

தொடர்பு: ஜெய்ஷ்-இ-முகமது

• பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) JeM இன் செயல்பாட்டுத் தளபதி முஃப்தி அஸ்கர் கான் காஷ்மீரியின் மகன்.

• ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.