பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது.. டிரம்பிடம் மோடி பேச்சு - நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது.. டிரம்பிடம் மோடி பேச்சு - நடந்தது என்ன?

பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது.. டிரம்பிடம் மோடி பேச்சு - நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil
Published Jun 18, 2025 11:22 AM IST

கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் 35 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார்.

பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது.. டிரம்பிடம் மோடி பேச்சு - நடந்தது என்ன?
பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது.. டிரம்பிடம் மோடி பேச்சு - நடந்தது என்ன?

மோடி - டிரம்ப் உரையாடல் குறித்து வெளியுறவுத் துறை செயலளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிபர் டிரம்பும் பிரதமர் மோடியும் இன்று சுமார் 35 நிமிடங்கள் பேசினர். உரையாடலின் போது, கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, "இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அல்லது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தம்" போன்ற பிரச்சினைகள் எந்த நேரத்திலும், எந்த மட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை என்பதை மோடி ட்ரம்பிடம் தெளிவுபடுத்தினார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உறுதியாக இருப்பதாக உலகிற்குத் தெரிவித்தது. மே 7 அன்று பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத மறைவிடங்களை மட்டுமே இந்தியா குறிவைத்து தாக்கியது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுக்கும் என்றும் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் முடிவு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடியாக எடுக்கப்பட்டது. இந்தப் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அவர் கூறினார்.

கனடாவிலிருந்து திரும்பும் வழியில் அமெரிக்காவிற்கு வர முடியுமா? என்று ட்ரம்ப் மோடியிடம் கேட்டார், ஆனால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் பிரதமர் மோடி அந்த அழைப்பை நிராகரித்துவிட்டதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்தும் ட்ரம்பும் மோடியும் விவாதித்தனர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை விரைவில் அமைதிக்கு அவசியம் என்றும் இதற்கான முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மிஸ்ரி கூறினார்.