சியால்கோட் உள்பட 6 பாகிஸ்தான் விமான தளங்கள் தகர்ப்பு.. கர்னல் சோபியா குரேஷி தகவல்
பஸ்ரூரில் உள்ள ரேடார் தளம் மற்றும் சியால்கோட்டில் உள்ள விமான தளமும் துல்லியமான வெடிமருந்துகளால் குறிவைக்கப்பட்டன என்று கர்னல் சோபியா குரேஷி கூறினார். இந்த நடவடிக்கைகளின் போது, இந்தியா பொது சொத்துக்களுக்கு மிகக் குறைந்த சேதத்தை ஏற்படுத்தியது எனவும் தெரிவித்தார்.

சியால்கோட் உள்பட 6 பாகிஸ்தான் விமான தளங்கள் தகர்ப்பு.. கர்னல் சோபியா குரேஷி தகவல்
பஸ்ரூரில் உள்ள ரேடார் தளம் மற்றும் சியால்கோட்டில் உள்ள விமானத் தளமும் துல்லியமான வெடிமருந்துகளால் குறிவைக்கப்பட்டது என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கர்னல் சோபியா குரேஷி கூறினார்.
இந்த நடவடிக்கைகளின் போது, இந்தியா பொது சொத்துக்களுக்கு மிகக் குறைந்த சேதத்தை ஏற்படுத்தியது.
6 ராணுவத் தளங்கள் தகர்ப்பு
ஆபரேஷன் சிந்தூரால் கோபமடைந்த பாகிஸ்தான், இந்தியாவைத் தாக்க முயன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று இரவு பாகிஸ்தானின் பல நகரங்களில் இந்திய விமானப்படை நாசவேலைகளை செய்தது.