Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!
Modi vs Rahul Gandhi: ரேபரேலியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, வரும் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு நரேந்திர மோடி பிரதமராக நீடிக்கமாட்டார் என கூறி உள்ளார்

‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு! (Hindustan Times/ Deepak Gupta)
ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என ரேபரேலி மக்களவை தொகுதியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
’அதானி, அம்பானி பெயர்களை மோடி கூறி உள்ளார்’
பிரதமர் நரேந்திர மோடியை எதையும் சொல்ல வைக்கும் சக்தி தனக்கு இருப்பதாக கூறிய அவர், "நரேந்திர மோடி ஒருபோதும் அம்பானி, அதானி பெயரை கூறியது என்று நான் சொன்னேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் அதானி, அம்பானி பெயர்களை சொல்லி பேசினார்.
பிறகு நான் வங்கிக் கணக்குகளில் பணத்தை வரவு வைக்கிறோம் என்று சொன்னேன். நரேந்திர மோடி தனது உரையில் 'கட்டா-கட் ' என்று மீண்டும் கூறுகிறார்.