காதலனை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
காதலனை நம்பி சென்ற பெண்ணை காதலன் அவரது நண்பர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் : குண்டா மாவட்டத்தில் உள்ள காலனிகஞ்ச் பகுதியை சேர்ந்த 23 வயதான அந்த இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த ஜாவித் என்பவர் உடன் பழகி வந்திருக்கிறார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அன்று அந்த பெண்ணை மும்பைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஜாவித்.
ட்ரெண்டிங் செய்திகள்
திருமணம் செய்வதென்றால் தன் மதத்திற்கு மாற வேண்டும் என்று அந்த பெண்ணிடம் சொல்லி கட்டாயப்படுத்தி அவரை மதமாற்றம் செய்ய வைத்திருக்கிறார். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அதில் தான் பெரும் அதிர்ச்சி.
காதல் கணவர் ஜாவித் தனது நண்பர்கள் மூன்று பேருடன் வந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் பின்னர் அந்த பெண்ணை கடந்த 23ஆம் தேதி அன்று காலனி கஞ்ச் பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு ஜாவித் தப்பிச் சென்றிருக்கிறார்.
அங்கிருந்து பெற்றோரிடம் வந்து சேர்ந்த அந்த இளம் பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி அழுது இருக்கிறார். இதையடுத்து தன் மகளை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தாக அப்பெண்ணின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரையடுத்து ஜாவித் உள்பட நாலு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாபிக்ஸ்