தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Husband Arrested For Murdering Wife In Kerala

குடிக்காதே என்ற மனைவியை கொன்று கட்டிலுக்கு அடியில் வைத்து நாடகம் – கணவன் கைது

Priyadarshini R HT Tamil
Mar 27, 2023 07:32 PM IST

Wife Murdered : கேரளாவில் மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே பள்ளிக்கு சென்ற மனைவி கடந்த 18ம் தேதி ஆண்டு விழா முடிந்து திரும்பி வரவில்லை என்று வட்சமாவின் உறவினர்களிம் விஜேஷ் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வட்சமாவின் உறவினர்கள், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்கள். போலீஸ் நிலையித்திற்கு விஜேசும் சென்று மனைவியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இவ்விரு புகார்களின் மீதும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால், விஜேஷின் உறவினர்களுக்கு அவர் மீதுதான் அதிக சந்தேகம் எழும்பியது. விஜேஷ் வீட்டில் உள்ள ஒரு அறை திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதையடுத்து வட்சமா காணாமல்போன 3 நாட்களுக்குப்பின்னர், விஜேஷின் வீட்டில் பூட்டப்பட்டே கிடந்த அந்த அறையை வட்சமாவின் உறவினர் திறந்து பார்த்தார்கள். 

அங்கு கட்டிலுக்கு அடியில் வட்சமா பிணமாகக் கிடந்ததைக்கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வட்சமாவை கொலை செய்து உடல் போர்வையால் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அங்கு வந்த அவர்கள் வட்சமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். 

பிரேத பரிசோதனை அறிக்கையில் வட்சமாவின் தலையில் பலத்த காயம் ஏறபட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையில் வட்சமாவை, கணவர் விஜேஷ் தலையில் அடித்துக்கொலை உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தது தெரியவந்தது. 

மதுப்பழக்கத்தை கைவிடும்படி விஜேஷிடம் வட்சமா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதோபோல் கடந்த 18ம் தேதியும் கணவன், மனைவி இடையே இதுகுறித்த தகராறு ஏற்பட்டது. அப்போது அவரை அடித்துக்கொலை செய்துவிட்டு விஜேஷ் வட்சமாவைக் காணவில்லை என்று நாடகம் ஆடியுள்ளார். 

இதையடுத்து, விஜேஷை கைது செய்ய போலீசார் முயன்ற நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். கேரளா – தமிழ்நாடு எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விஜேஷ் ஒளிந்துள்ளதால், அவரை தேடும் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். கேரளா – தமிழ்நாடு எல்லையில் இடுக்கி மாவட்டம் குமுளியில் அவர் பதுங்கியிருந்தபோது அவரை போலீசார் கைது செய்தார்கள். 

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மது குடித்து வந்த விஜேஷ் மீது வட்சமா போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜேஷ் அவரை கொலைசெய்து, உடலை போர்வையில் சுருட்டி கட்டிலுக்கு அடியில் வைத்துவிட்டு, மனைவி காணவில்லை என்று நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். தொர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கொலை செய்யப்பபடுவதற்கு முன் வட்சமா தனது உறவினர் சலோமி வாட்சப்பில் உருக்கமான மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த வாய்ஸ் மெசேஜில், “என்னால் வேறு இடத்திற்கு சென்று வாழ முடியும். நான் என் வீட்டிற்கு போக வேண்டிய அவசியமில்லை. நான் விடுதியில் தங்கிக்கொள்கிறேன். என்னை வாழவும் விடவில்லை. சாகவும் விடவில்லை. இந்த வாழ்க்கை வெறுத்துவிட்டது. யாரும் என்னை கண்டுபிடிக்க முடியாத இடத்தில் நான் வாழ வேண்டும். என்னைப்பற்றி யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். இந்த சூழ்நிலையை சந்தித்தவர்களுக்குத்தான் இது புரியும். நாம் சகித்துக்கொண்டு சேர்ந்து வாழ வேண்டும் என்று வெளியாட்கள் கூறுவார்கள். இதற்கு மேல் எனக்கு வேண்டாம். பெண் வாழ ஆண் தகுதியானவர் அல்ல“ என்று கூறியுள்ளார். 

WhatsApp channel

டாபிக்ஸ்