HT Explainer: பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஏன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது?
பேடிஎம் வங்கி செயல்பாடுகளை பிப்ரவரி 29ம் தேதியுடன் நிறுத்த ரிசர்வ் பேங்க் உத்தரவிட்டுள்ளது ஏன் என பார்ப்போம்.

Paytm இன் தாய் நிறுவனம் நொய்டாவை தளமாகக் கொண்ட One97 கம்யூனிகேஷன்ஸ் ஆகும். (Virendra Singh Gosain/ HT)
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம், புதிய டெபாசிட் தொகையை ஏற்கவும், கடன் பரிவர்த்தனை செய்யவும், ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்தியாவின் தலைமை வங்கியான ஆர்பிஐ ஒரு அறிக்கையில், வங்கியின் "தொடர்ச்சியான இணக்கமின்மை" காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி விதிமீறலில் ஈடுபட்டுள்ளதால் மேற்பார்வை நடவடிக்கை தேவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்வதற்கான எந்த காலக்கெடுவையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.
