Pawan Kalyan: சிறைவாசம் கொடுத்த பெருஞ்சினம்; சூத்திரம் வகுத்த பவன்; பக்காவாக பயன்படுத்திய பாஜக! - TDP- சாதித்தது எப்படி?
Pawan Kalyan: “சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஜனாசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, மாநிலத்தில் 160 க்கும் மேற்பட்ட சட்டமன்ற இடங்களை வென்றுள்ளது. இதற்கு காரணமானவர் பவன் கல்யாண். - TDP- சாதித்தது எப்படி?

Pawan Kalyan: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 175 சட்டமன்ற தொகுதிகளில், 130க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று, தன்னுடைய போட்டியாளரும், முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை தோற்கடித்து, மீண்டும் ஆட்சி அரியணைக்கு வந்திருக்கிறார்.
அவரது கூட்டணி கட்சிகளான ஜனசேனா கட்சி (ஜே.எஸ்.பி) பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகியவற்றுடன் சேர்ந்து நாயுடு 160க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி இமால வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
செய்தி தொடர்பாளர் சொல்வது என்ன?
இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுசந்தா சுபூதி கூறுகையில், "தெலுங்கு தேசம் கட்சி-பாஜக கூட்டணியின் மகத்தான வெற்றி, ஜெகன் ரெட்டியின் வளர்ச்சிக்கு எதிரான நிலைப்பாட்டாலும், ஆந்திர மக்கள் அடைந்துள்ள ஏமாற்றத்தையும், விரக்தியையும் பிரதிபலிக்கிறது” என்றார்.