India vs Canada: 'கனடாவில் இந்துக்களுக்கு ஆபத்து!' ஜஸ்டின் ட்ரூடோ கட்சி எம்.பி போர்க்கொடி...!
"நான் கவலைப்படுவது என்னவென்றால், இரத்தம் சிந்துவது இந்து கனேடியரின் இரத்தமாக இருக்கப் போகிறது"

காலிஸ்தான் ஆதரவு இயக்கத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவம் இந்தியா - கனடா நாட்டு உறவுகள் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து லிபரல் கட்சி எம்பி சந்திரா ஆர்யா கூறுகையில், ”கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் அறிக்கைக்குப் பிறகு என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். இங்குள்ள இந்து கனேடியர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள், இந்து கனடியர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி பேசினார்.
"நான் கவலைப்படுவது என்னவென்றால், இரத்தம் சிந்துவது இந்து கனேடியரின் இரத்தமாக இருக்கப் போகிறது" என்ற அவர், முதலாவதாக, காலிஸ்தான் இயக்கத்தின் வரலாறு வன்முறை மற்றும் கொலைகளால் நிரம்பி உள்ளது.
காலிஸ்தான் இயக்க வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் 38 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மிகப்பெரிய படுகொலையை கனடியர்கள் மறந்துவிட்டனர்.
9/11க்கு முன் நடந்த மிகப்பெரிய விமானப் பயங்கரவாதம் அது. கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதிதான் அதைச் செய்தான்.
சில மாதங்களுக்கு முன்பு, மூன்றாவதாக, நீதிக்கான சீக்கியர்களின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னூன் இந்து கனேடியர்களை நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுமாறு மிரட்டினார். இந்த வகையான வெறுப்பு குற்றங்கள் எந்த விளைவுகளும் இல்லாமல் வெளிப்படையாக செய்யப்படுகின்றன என அவர் குற்றம்சாட்டினார்.

டாபிக்ஸ்