வடமாநிலங்களில் கடும் குளிர்: விலங்குகளுக்கு ஹீட்டர் மற்றும் கேம்ப் ஃபயர் வசதி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  வடமாநிலங்களில் கடும் குளிர்: விலங்குகளுக்கு ஹீட்டர் மற்றும் கேம்ப் ஃபயர் வசதி!

வடமாநிலங்களில் கடும் குளிர்: விலங்குகளுக்கு ஹீட்டர் மற்றும் கேம்ப் ஃபயர் வசதி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 07, 2023 08:45 AM IST

Guwahati zoo: அடுத்த சில நாட்களுக்கு குளிர் கடுமையாக இருக்கும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடும் குளிர் காரணமாக உயிரின பூங்காக்களின் ஹீட்டர் வசதியும், கேம்ப் ஃபயர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
கடும் குளிர் காரணமாக உயிரின பூங்காக்களின் ஹீட்டர் வசதியும், கேம்ப் ஃபயர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

குளிரை பொருத்தவரை அது மனிதர்களை மட்டும் இம்சிப்பதில்லை. கால்நடைகள், விலங்குகள், பறவைகள் என அனைத்து ஜீவராசிகளையும் குளிர் கடுமையாக தாக்கும். அந்த வகையில் நாட்டில் உள்ள பல உயிரியல் பூங்காக்களில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு குளிரிலிருந்து காத்துக் கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

அந்த வகையில், கவுஹாத்தியில் உள்ள உயிரியல் பூங்காவில் பல்வேறு வசதிகளை அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளனர்.

மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளின் வசதியை மனதில் கொண்டு, கவுஹாத்தி உயிரியல் பூங்காவில் உள்ள அதிகாரிகள், விலங்குகளின் அடைப்புகளில் ஹீட்டர்களை நிறுவியுள்ளனர்.

மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் புலி, சிங்கம் போன்றவற்றின் கூண்டுகளுக்கு அருகில் ஹீட்டர்களை வைத்திருப்பதைக் காண முடிந்தது.

கவுஹாத்தி உயிரின பூங்காவில் குளிருக்கு ஒதுங்கியுள்ள மான்கள் மற்றும் காண்டாமிருகங்கள்
கவுஹாத்தி உயிரின பூங்காவில் குளிருக்கு ஒதுங்கியுள்ள மான்கள் மற்றும் காண்டாமிருகங்கள் (Rupjyoti Sarmah )

குவஹாத்தி உயிரியல் பூங்காவின் பணியாளர் ரஜினிகாந்த் டேகா கூறுகையில், "நாங்கள் இங்கு ஹீட்டர்களை ஏற்பாடு செய்துள்ளோம், மேலும் விலங்குகள் குளிர்ச்சியால் பாதிக்கப்படாமல் இருக்க மற்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

"புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு, நாங்கள் ஹீட்டர்களை நிறுவியுள்ளோம், அதே நேரத்தில் கரடிகளுக்கு நாங்கள் கதகதப்பை தரும் தண்டுகளை பயன்படுத்துகிறோம்," என்று அவர் கூறினார்.

"பறவைகளுக்கு 200 வாட் பல்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அவற்றின் கூண்டுகள் இரவில் பிளாஸ்டிக்கால் மூடப்பட்டிருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.

இரவு பறவைகளுக்கு பெட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார். இதோ போல சூரத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள உயிரின காப்பாகங்களிலும் விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்க கேம்ப் ஃபயர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளனர்.

அடுத்த சில நாட்களுக்கு குளிர் கடுமையாக இருக்கும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.