Government Bans 23 Ferocious Dogs: பிட்புல், புல்டாக் உள்ளிட்ட 23 நாய் இனங்களுக்கு மத்திய அரசு தடை!
Government Bans 23 Ferocious Dogs: நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஆக்ரோஷமான நாய் தாக்குதல்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில், குறிப்பாக, 23 'கொடூரமான' நாய் இனங்களை 'மனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தல்' என்று கருதி அவற்றின் இறக்குமதி, விற்பனை மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்தது
பிட்புல், புல்டாக் உள்ளிட்ட 23 ‘கொடூரமான’ நாய் இனங்களின் இறக்குமதி, இனப்பெருக்கம் மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. (Photo: HT)
Government Bans 23 Ferocious Dogs: நாடு முழுவதும் நாய்த்தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதிகரித்து வரும் ஆக்ரோஷமான நாய்த் தாக்குதல்களில், குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பாதிக்க்கப்பட்டு, சில நேரங்களில் மரணம்கூட அடைகின்றனர்.
இந்நிலையில் 23 கொடூரமான நாய் இனங்களை ''மனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தல்" என்று கருதி இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும்; அதனை இனப்பெருக்கம் செய்வதற்கும் மத்திய அரசு தடை விதித்தது.
இந்த இன நாய்களில் ராட்வீலர், பிட்புல், டெரியர், ஊல்ஃப், ரஷ்ய ஷெப்பர்ட் மற்றும் மாஸ்டிஃப்ஸ், ஆகியவை மனித உயிருக்கு ஆபத்தானவை என்று வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த மூர்க்கமான இன நாய்களின் கலப்பிற்கும் இனப்பெருக்கத்திற்கும் இந்திய அரசு தடை விதித்துள்ளது.