ஷேர் வர்த்தக ஆலோசனை என்ற பெயரில் மோசடி: எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை - பாதுகாப்பாக இருப்பது எப்படி?
எஸ்பிஐ வங்கியின் பெயரில், ஷேர் மார்க்கெட் குறித்த தவறான ஆலோசனைகளை வழங்குவதாக கூறி, சிலர் மோசடி செய்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது எஸ்பிஐ வங்கி. இதுபோன்ற செய்திகளை சரிபார்த்து, மோசடி செய்திகளை அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), தனது பெயரை பயன்படுத்தி ஷேர் மார்க்கெட் குறித்த ஆலோசனைகளை வழங்குவதாக கூறி, அங்கீகரிக்கப்படாத விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைத்தளமான எக்ஸில் வெளியிடப்பட்ட விரிவான வீடியோவில், ஷேர் மார்க்கெட் குறித்த ஆலோசனைகளை வழங்குவதாக கூறி, மோசடி செய்பவர்கள் பல்வேறு ஆன்லைன் தளங்களில் செய்திகளை பகிர்ந்து வருவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
“சில அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) உடன் தொடர்புடையதாக கூறி, ஷேர் மார்க்கெட் குறித்த ஆலோசனைகள், முதலீட்டு ஆலோசனைகள் அல்லது சிறப்பு நிதித் தகவல்களை வழங்குவதாக கூறி, குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் சேனல்கள் மூலம், விளம்பரங்கள் மற்றும் செய்திகளை பரப்பி வருகின்றனர்,” என்று வங்கி தெரிவித்துள்ளது.