தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Four Branded Witches Forced To Eat Excreta In Jharkhand

Jharkhand Witchcraft: ஜார்க்கண்டில் 4 பேர் வாயில் மலத்தை திணித்த கிராமவாசிகள்!

Divya Sekar HT Tamil
Sep 28, 2022 11:17 AM IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 பெண்கள் உட்பட நான்கு பேரை சூடான இரும்புக் கம்பியால் தாக்கி, அவர்களை மலத்தை உண்ண வைத்த பயங்கரம் அரங்கேறியிருக்கிறது.

4 பேர் வாயில் மலத்தை திணித்த பயங்கரம்
4 பேர் வாயில் மலத்தை திணித்த பயங்கரம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதோடு மட்டும் இல்லாமல் அவர்கள் மனித மலத்தை ஒரு பாட்டிலில் நிரப்பி, அதை உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும் வாயில் சிறுநீரை ஊற்றியும் கொடுமைபடுத்தியுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த சரையாஹத் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்தனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் இருவரின் நிலைமை மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக தியோகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்யதுள்ளனர். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி நடந்திருப்பதாகவும் போலீசாரின் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையே வந்ததாகவும் தெரிகிறது. கைதானவர்களிடம் மேற்கொண்டவிசாரணையில் "தாக்குதலுக்கு ஆளானவர்கள் தங்களது குழந்தையை நோய்வாய்ப்படச் செய்ததார்கள்" எனக் கூறியிருக்கிறார்கள்.

இதனிடையே சம்பவம் நடந்த அஸ்வரி கிராமத்தில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்