VS Achuthanandan: வி.எஸ்.அச்சுதானந்தன் நினைவாக 3 நாள் அரசு துக்கம்.. கேரளாவில் இன்று பொது விடுமுறை
VS Achuthanandan: துக்கத்தின் போது கேரளாவில் உள்ள அரசு கட்டடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வெள்ளிக்காகத் சங்கரன் அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் காலமானார். தலைவரின் மறைவுக்கு "ஆழ்ந்த வருத்தத்தை" வெளிப்படுத்திய அரசாங்கம், மூன்று நாள் அரசு துக்கத்தை அறிவித்தது.
அனைத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், சட்டரீதியான அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் செவ்வாய்க்கிழமை மூடப்படும் என்று மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
துக்க காலத்தில் கேரளாவில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அச்சுதானந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கடந்த மாதம் முதல் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முதல்வர் பினராயி விஜயன், நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் மற்றும் பிற சிபிஐ (எம்) தலைவர்கள் திங்கள்கிழமை பிற்பகல் மூத்த தலைவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றதாக பி.டி.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
