PM Modi: ’நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் இந்த முறை வெளிநாட்டு தலையீடுகள் இல்லை!’ பிரதமர் மோடி கிண்டல்!
நம்முட்டைய நாடு ஒரு இளம் நாடு, இன்று 20-25 வயதுடையவர்கள் 50 வயதாகும் போது விக்சித் பாரத்தின் மிகப்பெரிய பயனாளிகளாக இருப்பார்கள். அவர்கள் கொள்கை வகுப்பதில் தலைமையில் இருப்பார்கள் என நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பிரதமர் மோடி பேட்டி

Budget 2025 session: கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதல்கள் ஏதுமின்றி நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரை உடன் தொடங்குகிறது. நாளைய தினம் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு "வெளிநாட்டுத் தலையீடு இல்லாத முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இது" என்று கூறினார்.
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள அரசாங்கம் "ஒட்டுமொத்த வளர்ச்சி" என்பதில் அரசு கவனம் செலுத்தும் என்று வலியுறுத்திய பிரதமர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் புத்தாக்கம் (Innovation), உள்ளடக்குதல் (inclusion) மற்றும் முதலீடு (investment) ஆகிய 3I திட்டங்கள் முதன்மை பங்காற்றியுள்ளன என்றார்.
பெண்களுக்கான பலன்கள்
இந்த கூட்டத்தொடரில், நாட்டை வலுப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். இந்த அமர்வில், எப்போதும் போல, பல வரலாற்று மசோதாக்கள் சபையில் விவாதிக்கப்படும்.
இளம் தலைமுறையினருக்கான திட்டங்கள்
"நம்முட்டைய நாடு ஒரு இளம் நாடு, இன்று 20-25 வயதுடையவர்கள் 50 வயதாகும் போது விக்சித் பாரத்தின் மிகப்பெரிய பயனாளிகளாக இருப்பார்கள். அவர்கள் கொள்கை வகுப்பதில் தலைமையில் இருப்பார்கள். எங்கள் பார்வையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் எங்கள் இளம் தலைமுறைக்கு ஒரு பெரிய பரிசாக இருக்கும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் விக்சித் பாரத்தை வலுப்படுத்த எம்.பி.க்களுக்கு ஒரு "பொன்னான வாய்ப்பு" என்றும் பிரதமர் கூறினார்.
