PM Modi : பிரபல எழுத்தாளர், ஒடிசா முதல்வரின் சகோதரி கீதா மேத்தா காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்!
பிரபல எழுத்தாளர், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரியுமான கீதா மேத்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கீதா மேத்தா காலமானார்
பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரியுமான கீதா மேத்தா (80), நேற்று புதுடெல்லியில் காலமானார்.
1943-ம் ஆண்டு டெல்லியில் பிறந்த கீதா மேத்தா, பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவா். பிரபல எழுத்தாளரான இவா், ஸ்னேக் அன்ட் லேடா்ஸ், ராஜ், அன்ட் லேடா்ஸ் தி எடா்னல் கணேசா உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளாா்.
கீதா மேத்தா ஆவணப்பட இயக்குநா், பத்திரிகையாளராகவும் செயல்பட்டவர். உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த இவா், டெல்லியில் உள்ள தனது வீட்டில் காலமானாா்.