பாகிஸ்தான் பிடியில் பிஎஸ்எஃப் வீரர்: மீட்கும் நாளை எதிர்பார்த்து குடும்பத்தினர்!
எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் பூர்ண குமார் ஷாவின் குடும்பத்தினர், இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை இயக்குநர்கள் (டிஜிஎம்ஓ) சந்திப்பின் போது தங்கள் வழக்கு விசாரிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

பாகிஸ்தான் பிடியில் பிஎஸ்எஃப் வீரர்: மீட்கும் நாளை எதிர்பார்த்து குடும்பத்தினர்!
ஃபெரோஸ்பூர்: எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் பூர்ண குமார் ஷாவின் குடும்பத்தார், இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை இயக்குநர்கள் (டிஜிஎம்ஓ) சந்திப்பின் போது, தங்களது வழக்கு விசாரிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.
யார் இந்த பூர்ண குமார் ஷா?
40 வயதான ஷா, பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் பகுதியில் வேலி அருகே பணியில் இருந்தபோது தவறுதலாக சர்வதேச எல்லையைத் தாண்டியதால் ஏப்ரல் 23 அன்று பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார். எல்லையருகே வேலை செய்யும் விவசாயிகளைப் பாதுகாக்கும் 'கிசான் கார்டு' பிரிவில் அவர் ஒருவராக இருந்தார்.
