PAN-Aadhaar linking: பான் கார்டு - ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!
பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு அனைவரும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இந்த இரண்டையும் இணைப்பதற்குக் கடைசி நாளாக அறிவித்திருந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
அதே சமயம் கொரோனா தொற்று மிகக் கொடூரமாகப் பரவிய காரணத்தினால் அந்த இரண்டு ஆண்டுகளும் நாடு முழுவதும் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டது.
அந்த கால அவகாசத்தில் காலக்கெடுவானது முடிவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்ற காரணத்தினால், மேலும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இரண்டையும் இணைப்பதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாகக் காலக்கெடுவானது வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பான் கார்டு மற்றும் ஆதார் இணைக்க ஆன்லைன் வழி
- வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ தளமான http://www.incometax.gov.in செல்ல வேண்டும்.
- அதன் உள்ளே quick links ஆப்ஷன் உள்ளே சென்று link Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் உள்ளே தோன்றும் திரையில் பான் கார்டு நம்பர், ஆதார் எண், உங்களது பெயர், செல்போன் நம்பர் உள்ளிட்டவற்றைப் பதிவிட வேண்டும்.
- ஒருமுறை விவரங்களை முழுமையாகச் சரி பார்க்க வேண்டும். அதன் பின்னர் I validate my Aadhar details என்ற ஆப்ஷனை உறுதி செய்து continue ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பின்னர் நீங்கள் பதிவு செய்த எண்ணுக்கு OTP ஒன்று அனுப்பப்படும். அதனைக் கேட்கும் இடத்தில் டைப் செய்து பின்னர் validate கொடுக்க வேண்டும்.
- அதன் பின்னர் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்படும்.
டாபிக்ஸ்