மீண்டும் காங்கிரஸ்க்கு பட்டை நாமம்! மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்!
மகாராஷ்டிராவில் ஒரு கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகவும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்தன.

மீண்டும் காங்கிரஸ்க்கு பட்டை நாமம்! மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைக்கும்! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு (HT_PRINT)
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. .
பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின்படி பாஜக தலைமையிலான கூட்டணி 175 முதல் 195 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் தலைமையிலான எம்விஏ 85 முதல் 112 இடங்களில் வெற்றி பெறும். மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 7-12 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிஜேபி-சிவசேனா-என்சிபி கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என்று மேட்ரைஸ் கணித்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக 150 முதல் 170 இடங்களை கைப்பற்றும் என அதில் கூறப்பட்டு உள்ளது.