‘மன்மோகன் சிங்கை கிண்டலடித்த பாகிஸ்தான் பிரதமர்.. மேடையில் கொந்தளித்த மோடி’ இந்த சம்பவம் தெரியுமா?
பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீஃப், டாக்டர் மன்மோகன் சிங்கை அவமரியாதையாகப் பேசியபோது, குஜராத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி கடும் கோபம் கொண்டது உங்களுக்கு தெரியுமா?

டாக்டர் மன்மோகன் சிங் ஒரு மரியாதைக்குரிய நபராகவும், உறுதியான முடிவுகளை எடுப்பவராகவும் அறியப்படுகிறார். அவர் பிரதமராக இருந்தபோது, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு வலுப்பட்டது. இது பாகிஸ்தானுக்குப் பிடிக்கவில்லை. கோபமடைந்த பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீஃப், டாக்டர் மன்மோகன் சிங்கை 'கிராமத்துப் பெண்' என்று அவமரியாதையாகப் பேசும் தவறைச் செய்தார்.
டாக்டர் மன்மோகன் சிங், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் தன்னைப் பற்றிப் புகார் செய்கிறார் என்று அவர் குற்றம் சாட்டினார். இதனால் நவாஸ் ஷெரீஃப் மிகவும் அவமானப்பட்டு, மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று. தான் அப்படிச் சொல்லவே இல்லை என்று கூறி, தனது வார்த்தைகளில் இருந்து பின்வாங்கினார். அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீஃப்பைக் கடுமையாகக் கண்டித்தார். அவர் நம்முடைய பிரதமர், அவரை கிண்டல் செய்ய பாகிஸ்தானுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று அப்போது கேள்வி எழுப்பினார் மோடி.
ஒரு பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி, "இந்தியாவில், எங்கள் பிரதமருடன் நாங்கள் போராடுவோம். கொள்கைகளுக்காக வாதிடுவோம். ஆனால் அவர் 125 கோடி மக்களின் பிரதமர். நவாஸ் ஷெரீஃப், உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நீங்கள் எங்கள் நாட்டின் பிரதமரை 'கிராமத்துப் பெண்' என்று அழைக்கிறீர்கள். அவர் ஒபாமாவிடம் சென்று உங்கள் மீது புகார் செய்கிறார் என்கிறீர்கள். நான் அந்த பத்திரிகையாளர்கள் யார் என்று அறியேன். நவாஸ் ஷெரீஃப் முன் அமர்ந்து அவரது இனிப்புகளைச் சாப்பிட்ட அந்த பத்திரிகையாளர்கள், நவாஸ் ஷெரீஃப் நம் நாட்டின் பிரதமரை அவமரியாதையாகப் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பத்திரிகையாளர் நவாஸ் ஷெரீஃப்பின் இனிப்புகளை உதறிவிட்டு வெளியேறி இருக்க வேண்டும் என்று நாடு எதிர்பார்த்தது" என்று அப்போது கடுமயைாக பேசினார் மோடி.