அஸ்ஸாமில் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் - 8 பேர் உயிரிழப்பு!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  அஸ்ஸாமில் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் - 8 பேர் உயிரிழப்பு!

அஸ்ஸாமில் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் - 8 பேர் உயிரிழப்பு!

Divya Sekar HT Tamil
Jul 10, 2022 10:56 AM IST

அஸ்ஸாமில் பரவி வரும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

<p>அஸ்ஸாமில் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்</p>
<p>அஸ்ஸாமில் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்</p>

ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாமில் கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது .

இதுகுறித்து அஸ்ஸாம் மாநில சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் அவினாஷ் ஜோஷி, தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் டாக்டர் எம்.எஸ்.லட்சுமி பிரியா ஆகியோர் நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். 

அதில், நிலைமையை சமாளிக்க வரும் 16ஆம் தேதிக்குள் மாவட்ட விரைவுப் பதில் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.