வருடம் ரூ. 1.3 கோடி சம்பளம் வேணாம் - வேலை தான் வேணும்!
அயர்லாந்தில் தனக்கு வேலை ஏதும் கொடுக்காமல், வருடத்திற்கு ரூ 1.3 கோடி சம்பளம் தரும் நிறுவனம் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டப்ளின்: ஐரிஷ் ரயில் என்ற நிறுவனத்தில் நிதி மேலாளராகப் பணிபுரிகிறார் டெர்மாட் அலஸ்டெய்ர் மில்ஸ். இவர் தனக்கு வேலை ஏதும் கொடுக்காமல், வருடத்திற்கு ரூ 1.3 கோடி சம்பளம் தருவதாக அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இவர் தொடர்ந்த இந்த விநோத வழக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து டெர்மாட் அலஸ்டெய்ர் மில்ஸ் கூறுகையில், ”ஆரோக்கியமான பணிச் சூழல் ஒரு நபரின் மனநலத்திற்கு மிகவும் அவசியம். ஆனால், தன் பணியே தனக்கு பெரிய அழுத்தமாக ஆகியுள்ளது.
வாரத்தில் 5 நாட்களில் நான் 2 நாட்கள் தான் அலுவலகமே செல்கிறேன். அப்போதும் கூட சரியான வேலை இல்லாமல் வீடு திரும்பிவிடுவேன். அலுவலக நேரத்தில் செய்தித்தாள் வாசிக்கிறேன், சாண்ட்விச் சாப்பிடுகிறேன், நடைப்பயிற்சி கூட சென்று வருகிறேன்.
எனது நிறுவனத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் பற்றி நான் ஒருமுறை வெளிக்கொண்டு வந்தேன். அதன் பின்னர் தான் இது எல்லாம் ஆரம்பித்தது. என் திறமைக்கு ஏற்ப எந்த ஒரு வேலையும் தருவதில்லை. அதனால்தான் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன்" என்றார்.
டாபிக்ஸ்