போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்.. தொடரும் தாக்குதல்! பாக்., பிரதமர் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!
இந்தியாவுக்கு எதிரான அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவேபாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்.. தொடரும் தாக்குதல்! - காரணம் என்ன? (PTI)
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே பாகிஸ்தான் ஒப்பந்ததை மீறி மீண்டும் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
மீண்டும் தாக்குதல்
பாகிஸ்தான் காஷ்மீர் ஸ்ரீ நகரில் மீண்டும் தாக்குதல் தொடுத்த நிலையில் அங்கு சைரன்கள் ஒலிக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. உதம்பூர் பகுதி மீண்டும் ட்ரோன்களால் தாக்கப்பட்டு இருக்கிறது.