viral video: நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற மருத்துவர்!
நாயை காரில் கட்டி மருத்துவர் இழுத்துச் சென்ற வீடியோ வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மருத்துவர் ஒருவர் நாய் ஒன்றை காரில் கட்டி சாலையில் இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி அன்று, வெள்ளை நிற காரில் நாய் ஒன்றை கயிற்றில் கட்டி டாக்டர் ரஜினி குவாலா என்பவர் அதனை இழுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
கார் வேகமாக சென்றதால் அதன் வேகத்தை தாக்குப் பிடிக்க முடியாத நாய் திணறி சென்றது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த நாயை கொடுமை செய்த மருத்துவர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவரின் மருத்துவ உரிமையை ரத்து செய்ய வேண்டும் என விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். தற்போது அந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டாபிக்ஸ்