Pradhan Mantri Insurance: வெறும் 20 ரூபாயில் 2 லட்சம் இன்சூரன்ஸ் இருக்கு தெரியுமா ? இப்போவே போடுங்க!
Pradhan Mantri Insurance: எல்.ஐ.சி தொடங்கி பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் எண்ணற்ற காப்பீடு திட்டங்களை மக்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும் பல காப்பீடுகள் நம்முடைய அவசர தேவைக்கு பயன்படுகின்றன. நம் குடும்பத்தில் எவருக்கேனும் ஏற்படும் திடீர் விபத்து அல்லது மரணத்தின் போது நம்முடைய முதல் யோசனையாக தோன்றுவது "ஏதேனும் இன்சூரன்ஸ் போட்டு இருக்கலாமே ? " என்பது தான். இன்சூரன்ஸ் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிகரமனதாக இருப்பதோடு மட்டுமில்லாமல், இறந்த நபரின் பெரிய கடமையாகவும் இருக்கிறது.
எல்.ஐ.சி தொடங்கி பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் எண்ணற்ற காப்பீடு திட்டங்களை மக்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. காப்பீடுகளில் இரு வகைகளான ஆயுள் காப்பீடு (லைஃப் இன்சூரன்ஸ்) மற்றும் மருத்துவக் காப்பீடு (ஹெல்த் இன்சூரன்ஸ்) ஆகியவைகளில் பல உட்பிரிவு திட்டங்கள் உள்ளன. தமிழ்நாடு அளவில் மிகவும் பிரபலமான கலைஞர் காப்பீட்டு திட்டம் உள்ளது. அதைப் பின்பற்றி அறிமுகப்படுத்தப்பட்ட மத்திய அரசின் தேசிய அளவிலான ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டமும் அவசர மருத்துவ சிகிச்சை பெறும் எண்ணற்ற பாமர மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.
அதேபோன்று 2015ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பிரதம மந்திரி காப்பீடு திட்டங்கள் குறித்து இங்கு அறிவோம்.
