Delhi Railway Station Stampede: ‘டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ரயில்வேயின் அலட்சியம்’: ராகுல் குற்றச்சாட்டு
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Delhi Railway Station Stampede: ‘டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ரயில்வேயின் அலட்சியம்’: ராகுல் குற்றச்சாட்டு

Delhi Railway Station Stampede: ‘டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ரயில்வேயின் அலட்சியம்’: ராகுல் குற்றச்சாட்டு

Manigandan K T HT Tamil
Published Feb 16, 2025 03:32 PM IST

Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Delhi Railway Station Stampede: ‘டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ரயில்வேயின் அலட்சியம்’: ராகுல் குற்றச்சாட்டு
Delhi Railway Station Stampede: ‘டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ரயில்வேயின் அலட்சியம்’: ராகுல் குற்றச்சாட்டு

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என்றும் கூறினார்.

ராகுல் தனது எக்ஸ் பதிவில், “புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலால் 18 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். இந்த சம்பவம் ரயில்வேயின் தோல்வியையும் அரசாங்கத்தின் உணர்வற்ற தன்மையையும் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. பிரயாக்ராஜுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் செல்வதைக் கருத்தில் கொண்டு, நிலையத்தில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியம் காரணமாக யாரும் உயிரிழக்காமல் இருப்பதை அரசும், நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.

புதுடெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். இரவு 10 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளா 2025 திருவிழாவிற்காக பிரயாகராஜுக்குச் செல்ல வந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

இந்திய ரயில்வே வடக்கு சிபிஆர்ஓ அதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ.யிடம் கூறுகையில், “டெல்லி ரயில் நிலையத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது, ஒரு பயணி 14 மற்றும் 15 நடைமேடைகளுக்கு செல்லும் படிக்கட்டுகளில் வழுக்கி விழுந்தார், இதன் விளைவாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பலர் நெரிசிலில் சிக்கினர்” என்றார்.

இறந்தவர்களின் பெயர்கள்

ஆஹா தேவி (79 வயது), பிங்கி தேவி (41), ஷீலா தேவி (50), வியோம் (25), பூனம் தேவி, லலிதா தேவி (35), சுருச்சி (11), கிருஷ்ணா தேவி (40), விஜய் ஷா (15), நீரஜ் (12), சாந்தி தேவி (40), பூஜா குமார் (8), சங்கீதா மாலிக், பூனம் (வயது 34), மம்தா ஜா (40), ரியா சிங் (7), பேபி குமாரி (24), மனோஜ் (47).

'நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது'

நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக என்.டி.ஆர்.எஃப் கமாண்டன்ட் தௌலத் ராம் சவுத்ரி உறுதிப்படுத்தினார். "தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. காயமடைந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் 14-ம் எண் நடைமேடையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. நாங்கள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

ரயில்வே துணை போலீஸ் கமிஷனர் (டி.சி.பி) கே.பி.எஸ் மல்ஹோத்ரா கருத்துப்படி, பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் எண் 14 இல் ஏராளமான பயணிகள் கூடியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. கூடுதலாக, ஸ்வதந்திரதா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் ராஜ்தானி புறப்படுவதில் தாமதம் 12, 13 மற்றும் 14 நடைமேடைகளில் மேலும் நெரிசலுக்கு வழிவகுத்தது.

இதற்கிடையில், டெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கான காரணத்தை தீர்மானிக்க இரண்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

"இந்த விவகாரம் குறித்து விசாரிக்க இரண்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் உள்ளது, பயணிகள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் ரயில் இயக்கம் இப்போது சாதாரணமாக உள்ளது" என்று ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பர (இடி / ஐபி) நிர்வாக இயக்குனர் திலீப் குமார் கூறினார்.

Manigandan K T

TwittereMail
மணிகண்டன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 10 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன், அண்ணாமலை யுனிவர்சிட்டியில் எம்.ஏ. அரசியல் அறிவியல் மற்றும் டிப்ளமோ ஜர்னலிசம் படித்துள்ள இவர், தினமணி நாளிதழ், நியூஸ் 7 தமிழ் மற்றும் ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.