Arvind Kejriwal: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு.. ‘கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு இருக்கு’ - சரமாரியாக சாடிய நீதிபதி!
Arvind Kejriwal: அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குநரகம் கைது செய்ததை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
இது குறித்து உயர்நீதிமன்றம், “கெஜ்ரிவாலை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் மத்திய அரசிடம் இருக்கிறது. டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளார்.” என்று கூறியிருக்கிறது.
முன்னதாக டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சஞ்சய் சிங் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். சஞ்சய் சிங் அக்டோபர் 4, 2023 அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார், கெஜ்ரிவால் இந்த ஆண்டு மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் டெல்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (இ.டி) கைது செய்யப்பட்டதிலிருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேகமாக எடை குறைந்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி கடந்த புதன்கிழமை தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்திருப்பதன் மூலம் அவரது ஆரோக்கியத்திற்கு பாரதிய ஜனதா கட்சி ஆபத்தை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி இருந்தார்.
மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டதிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் 4.5 கிலோ எடை குறைந்துள்ளார், இது மிகவும் "கவலைக்குரியது" என்று அதிஷி எக்ஸ் இல் குறிப்பிட்டிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான நீரிழிவு நோயாளி என்றும், "இன்னும் நாட்டிற்காக 24 மணி நேரமும் உழைக்கிறார்" என்றும் அவர் கூறினார்.
"அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான நீரிழிவு நோயாளி. உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், அவர் நாட்டிற்கு சேவை செய்வதற்காக 24 மணி நேரமும் உழைத்தார். கைது செய்யப்பட்டதில் இருந்து, அரவிந்த் கெஜ்ரிவால் 4.5 கிலோ எடை குறைந்துள்ளார். இது மிகவும் கவலையளிக்கிறது. இன்று, பாஜக அவரை சிறையில் அடைப்பதன் மூலம் அவரது ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது" என்று அதிஷி கூறினார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நேர்ந்தால், முழு நாட்டையும் மறந்து விடுங்கள், கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார். கடந்த 12 நாட்களில் கெஜ்ரிவாலின் கடுமையான எடை இழப்பு நடந்துள்ளது என்று ஆம் ஆத்மி தலைவர் கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை அழிக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லலாம், எனவே முழு நாடும் உங்களை கவனித்து வருகிறது என்று நான் பாஜகவை எச்சரிக்கிறேன் என்று அதிஷி கூறி இருந்தார்
இதையடுத்து திகார் சிறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கெஜ்ரிவாலின் முக்கிய உறுப்புகள் இயல்பாக உள்ளன. அவர் ஆரோக்கியமாக உள்ளார். கெஜ்ரிவாலுக்கு திகார் சிறையில் தனது நீரிழிவு மருந்தை தன்னுடன் வைத்திருக்கவும், சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருந்தால் டோஃபிகளையும் வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திகார் சிறையில் டெல்லி முதல்வர் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்