Delhi Assembly Election 2025: ‘கெஜ்ரிவால் முதுகில் குத்தினார்’ காங்கிரஸ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Delhi Assembly Election 2025: ‘கெஜ்ரிவால் முதுகில் குத்தினார்’ காங்கிரஸ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு!

Delhi Assembly Election 2025: ‘கெஜ்ரிவால் முதுகில் குத்தினார்’ காங்கிரஸ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Feb 04, 2025 10:21 AM IST

காங்கிரஸின் ராஜ்யசபா உறுப்பினர் அஜய் மாகன் பேட்டி ஒன்றில், டெல்லி தேர்தலின் போது கூட்டணி அமையாதது மற்றும் INDIA கூட்டணியின் கட்சிகள் காங்கிரஸுக்கு ஆதரவு கொடுக்காதது குறித்து ANIக்கு அளித்த பேட்டியில் காரணத்தை வெளிப்படுத்தினார். அவர் ஹரியானாவில் கூட்டணி அமையாததற்கான காரணத்தையும் கூறினார்.

Delhi Assembly Election 2025: ‘கெஜ்ரிவால் முதுகில் குத்தினார்’ காங்கிரஸ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு!
Delhi Assembly Election 2025: ‘கெஜ்ரிவால் முதுகில் குத்தினார்’ காங்கிரஸ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு! (PTI)

ஏன் ஆதரவு கிடைக்கவில்லை?

ANIக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸின் ராஜ்யசபா உறுப்பினர் அஜய் மாகன் கூறுகையில், ‘இந்த விஷயம் குறித்து INDIA கூட்டணியின் கூட்டாளிகளிடம் பேசியதாகக் அந்த பேட்டியில் தெரிவித்த அவர், அனைத்து கட்சிகளிடமும் பேசி, எங்களுடன் சேர்ந்து நடுநிலையாக இருங்கள் என்று காங்கிரஸ் கூறியதாகவும் தெரிவித்தார். பெருங்கூட்டணியின் கூட்டாளிகள் உங்கள் கட்சியின் பேச்சை ஏற்கவில்லையா என்று அஜய் மாகனிடம் பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மாகன், ‘கட்சிகள் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை, அதனால்தான் இன்று அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார்கள்,’ என்று பதில் கூறினார்.

'கேஜ்ரிவால் முதுகில் குத்தினார்'

ராஜ்யசபா உறுப்பினர் அஜய் மாகன் மேலும் கூறுகையில், டெல்லி தேர்தலில் கூட்டணிக்காக அர்விந்த் கேஜ்ரிவாலிடம் சென்றதாக பேட்டியின் போது தெரிவித்தார். ‘ஹரியானாவிலும் எங்கள் இடங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது, அப்போது அவர்கள் 4 இடங்களுக்குப் பதிலாக 6 இடங்கள் வேண்டும் என்று விரும்பினர். எங்கள் உள்ளூர் தலைவர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம். அடுத்த நாள் அர்விந்த் கேஜ்ரிவால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஹரியானாவில் 90 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்தார். டெல்லியிலும் இதைத்தான் செய்தார். ஆம் ஆத்மி கட்சி முதுகில் குத்தியுள்ளது,’ என்று பேட்டியில் மாகன் கூறினார்.

தனித்துவிடப்பட்ட காங்கிரஸ்

டெல்லி சட்டமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் அவர்கள் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவை எதிர்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், ஆம் ஆத்மியையும், அக்கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாஜக தரப்பில், ஆம் ஆத்மி கட்சியை நேரடி போட்டியாக வைத்து தங்கள் பிரசாரத்தை செய்து வருகிறது. களத்தின் பாஜக-ஆம் ஆத்மி என்கிற போட்டியே நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் பங்கு இந்த முறை எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.