தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Comparing Wife To Other Women Also A Mental Cruelty, Says Kerala High Court

மனைவியை பிற பெண்களுடன் ஒப்பிடுவது மனரீதியான கொடுமை - கேரளா உயர்நீதிமன்றம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 17, 2022 08:54 PM IST

13 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கிய குடும்பநல நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்த கணவருக்கு, மனைவியை பிற பெண்களுடன் ஒப்படுவது மனரீதியாக கொடுமைபடுத்துதல் எனக் கூறி விவாகரத்தை உறுதி செய்து கேரளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

விவகாரத்து வழக்கில் மனைவியை பிற பெண்களோடு !ஒப்படுவது கொடுமையானது என கேரளா உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
விவகாரத்து வழக்கில் மனைவியை பிற பெண்களோடு !ஒப்படுவது கொடுமையானது என கேரளா உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

நான் கவர்ச்சியாக இல்லை என்ற காரணத்தால் உடலுறவு கொள்வதைத் தவிர்த்து வந்தார். ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த போதிலும் எங்களுக்குள் மனரீதியான பந்தம் உறுதியாக ஏற்படவில்லை. எங்களது திருமண உறவு முழுமை அடையாமல் இருப்பதால் விவாகரத்து அளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு 13 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டது. அதில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, 13 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கி கொச்சி குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண்மணியின் கணவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், "மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடுவதும், தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இல்லை என்று தொடர்ந்து கேலி செய்வதும், மனரீதியாக கொடுமைபடுத்துவதாகும். இந்த கொடுமைகளை எந்த பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை தொடர்ந்து கடைபிடிப்பது ஒழுக்கமின்மைக்கு வழிவகுப்பதோடு, சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின் கணவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தனர். அத்துடன் அந்த உத்தரவில் இருந்த முழுமை இல்லாத பந்தம் என்பதை நீக்கி, கணவரின் மனரீதியாக கொடுமை படுத்தியதன் காரணமாக விவாகரத்து வழங்கப்பட்ட என மாற்றினர்.

IPL_Entry_Point