அருணாச்சலப்பிரதேசத்தின் 11 இடங்கள் பெயரை மாற்றிய சீனா
அருணாச்சலப்பிரதேசத்தின் 11 இடங்களின் பெயரை சீனா மாற்றியுள்ளது. ஒருதலைபட்சமாக சீனா இதுபோல் பெயரை மாற்றுவது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக சீனா இருமுறை 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் பெயரை மாற்றியுள்ளது.

சீனா, அருணாச்சலப்பிரதேசத்தின் 11 இடங்களின் பெயரை மாற்றி தெற்கு திபெத் என்று கூறுகிறது. இது புதுடெல்லிக்கும், பெய்ஜிங்கிற்குமான அவநம்பிக்கையை ஆழப்படுத்துகிறது. பெயர் மாற்றப்பட்டுள்ள இடங்களின் பட்டியலில் வசிப்பிடங்கள், மலைகள் மற்றும் ஆறுகளும் உள்ளன.
அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களின் பெயரை சீனா மாற்றியுள்ளது. ஒருதலைபட்சமாக சீனா இதுபோல் பெயரை மாற்றுவது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக சீனா இருமுறை 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் பெயரை மாற்றியுள்ளது.
இதற்கு இந்திய அதிகாரிகளிடம் இருந்து உடனடியான பதில் எதுவுமில்லை. இதுகுறித்து இந்திய தரப்புக்கு தெரியும். அண்மைக்காலங்களில் சீனாவின் நடவடிக்கைகளின்தொடர்ச்சியாக இது செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் செய்யப்பட்ட பெயர் மாற்றங்களையும் இந்தியா நிராகரித்துள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் பகுதி அதை பிரிக்க முடியாது என்பதை இந்தியா வலியுறுத்துகிறது.
சீன அரசின் மாநில கவுன்சிலின் தொடர்புடைய விதிமுறைகளின்படி, எங்கள் அமைச்சகம், மற்ற துறைகளுடன் சேர்ச்ந்து புவியியல் பெயர்களை நிர்வகிக்கும் வகையில், சில புவியியல் பெயர்களை தெற்கு திபெத் பகுதியில் மாற்றியுள்ளது என்று சீனாவில் சிவில் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன நாட்டின் வரைபடங்களில் மென்டரின் மொழியில் அந்த பெயர்கள் இடம்பெறும். 11 இடங்களின் அலுவலர் பெயர்கள் அமைச்சகத்தால் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. பெயர் மாற்றப்பட்ட இடங்களில் 2 நிலப்பகுதி, 5 மலைகள், 2 வசிப்பிடங்கள் மற்றும் இரண்டு ஆறுகளின் பெயர்களும் அடங்கும். அந்த இடங்களின் வகைகளையும், துணை நிர்வாக மாவட்டங்களின் பெயர்களையும் அது பட்டியலிட்டுள்ளது. அரசு நடத்தும் செய்தி இதழில் அரசு அறிவிப்பாக இது வந்துள்ளது. இது திபெத் பகுதிகளில் உள்ள இடங்களின் பெயர்களின் மூன்றாவது பாகம், இதை சிவில் நிர்வாக அமைச்சகம் வெளியிட்டுள்ளமு என்று குறிப்பிட்டுள்ளது. இன்னும் சில இடங்களின் பெயர்களும் விரைவில் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதிகள் தன்னாட்சி பெற்ற திபெத்துக்கு சொந்தமானவை என்று சீனா கூறுகிறது.
சீனா, தற்போது ஏன் இந்த பெயர் மாற்றங்களை செய்துள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், இது ஏற்கனவே நடந்த சம்பவம் என்பதால் இந்தியாவிற்கு இது ஆச்சர்யமில்லை. மாற்றப்பட்ட பெயர்களால் நேரடி பாதிப்புகள் அருணாச்சல பிரதேசத்தில் ஏற்படவில்லை. 2017ம் ஆண்டு பெயர் மாற்றிய பட்டியலை சீனா வெளியிட்டபோது, திபெத் ஆன்மீக தலைவர் தலாய்லாமா அருணாச்சல பிரதேசத்திற்கு வருகை தந்துவிட்டு திரும்பியிருந்தார். தலாய்லாமா திபெத்தை சுதந்திர நாடாக்க விரும்புகிறார் சீனா கூறுகிறது.
புதிய எல்லை பாதுகாப்பு சட்டம் 2021ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வந்தது. அதில் இருந்து பெய்ஜிங், அருணாச்சல பிரதேசத்தில் 15 இடங்களின் பெயர்களை மாற்றியது. சீனாவின் இந்த நகர்வை இந்தியா தள்ளுபடி செய்தது. மேலும் இதுபோன்ற நடவடிக்கை அது இந்தியாவின் பகுதி என்பதை மாற்றாது என்றும் குறிப்பிட்டது. இரு பகுதிகளின் எல்லைக்கோட்டிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்களும், 4 சீனர்களும் கொல்லப்பட்டார்கள். 1975ம் ஆண்டுப்பின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் மரணங்கள் நிகழ்கிறது.

டாபிக்ஸ்