ஜம்முவில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி, 7 பேர் காயம்!
பாகிஸ்தான் தொடங்கிய எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டில், சப் - இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜம்முவின் ஆர்.எஸ்.புரா செக்டாரில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) வீரர் ஒருவர் கொல்லப்பட்டு இருக்கிறார் மற்றும் ஏழு பேர் காயமடைந்து இருக்கின்றனர்.
சப் - இன்ஸ்பெக்டர் வீரமரணம்
பாகிஸ்தான் தொடங்கிய எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டில், சப் - இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதில் முகமது இம்தியாஸ் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார் அவர் மிக உயர்ந்த தியாகத்தை செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரங்கல் தெரிவித்த எல்லைப்படை
இது குறித்து எல்லைப்படை தன்னுடைய எக்ஸ் தளத்தில் , ‘மே 10, 2025 அன்று ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரா பகுதியில் சர்வதேச எல்லையில் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடந்தபோது, தேச சேவையில் சப்-இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் செய்த உயர்ந்த தியாகத்திற்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறது.
சப்-இன்ஸ்பெக்டர் இம்தியாஸின் குடும்பத்தினருக்கு பி.எஸ்.எஃப் இயக்குநர் ஜெனரல் மற்றும் அனைத்து தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.

டாபிக்ஸ்