Kerala Bride photo shoot :நடுரோட்டில் போஸ் கொடுத்த மணப்பெண்- இதுதான் காரணமாம்!
கேரளாவில் நடைபெற்ற மணப்பெண் போட்டோ சூட் ஒன்று இணைய முழுக்க வைரல் ஆகி வருகிறது.
கேரளா : நிலம்பூர் அருகே பூக்கோட்டு பாலம் பகுதியை சேர்ந்தவர் சிஜீஷா (23). இவருக்கு நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. தொடர்ந்து அலங்காரம் செய்த பின்னர் வீட்டில் இருந்து திருமண மண்டபத்துக்கு மணப்பெண் காரில் சென்றார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அப்போது சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. அவர்கள் திருமணத்திற்கு முதல் நாள் தான் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு சாலையில் இருக்கும் பிரச்சினைகளை வெளிக்காட்டும் வகையாக அந்த பெண் டிரைவிங் போட்டோ சூட்டை சாலையில் எடுத்துள்ளார்.
சாலைகள் சரியாக இல்லை என்பதை வெளிக்காட்டும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தப் பெண் இந்த ப்ரீ வெட்டிங் போட்டோ சூட்டை எடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. பின்னர் உறவினர்களுடன் மணப்பெண் காரில் திருமண மண்டபத்துக்கு சென்றார். அங்கு திருமணம் நடந்தது.
டாபிக்ஸ்