பெங்களுரு கூட்ட நெரிசல்: ஆர்சிபி ஐபிஎல் வெற்றி நிகழ்வில் மோதலுக்கு காரணம் என்ன? முழு விவரம்
சுமார் 50 ஆயிரம் பேர் சின்னசாமி ஸ்டேடியத்தின் 1 கிமீ சுற்றளவில் கூடியிருந்ததாகவும், பலர் வாயில்களைத் தள்ளித் தள்ளி உள்ளே நுழைய முயற்சித்தினர். தடைகளை தாண்டி ஏறிச் செல்லவும் முயற்சித்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் முதல் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வெற்றியைக் கொண்டாட பெருமளவிலான கூட்டம் சேர்ந்ததில், பெங்களுருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம் அருகே நேற்று (புதன்கிழமை) மாலை நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்து, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள், அவர்களில் பலர் மாணவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூரு ஸ்டேடியத்தின் கொள்ளளவு 35 ஆயிரம் பேர் என்றாலும், 2 முதல் 3 லட்சம் பேர் வரை வந்திருந்தனர் என முதலமைச்சர் சித்தராமையா குறிப்பிட்டார். " கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற போட்டிக்கு பிறகு, புதன் கிழமை கிரிக்கெட் சங்கம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. எனவே இவ்வளவு பேர் வருவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை."