ஏர் இந்தியா விமான விபத்து: பாதுகாப்பு குறைபாடு காரணமாக 3 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய DGCA கடுமையான நடவடிக்கை!
சமீபத்திய பாதுகாப்புப் பிழைகளுக்குப் பிறகு, மூன்று ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஏர் இந்தியாவுக்கு DGCA உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த பாதுகாப்புப் பிழைகள் குறித்த கவலை எழுந்துள்ளது.

விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான DGCA (Directorate General of Civil Aviation), ஜூன் 21 ஆம் தேதி சனிக்கிழமை, சமீபத்திய பாதுகாப்புப் பிழைகளுக்குப் பிறகு, மூன்று ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
லண்டன் செல்ல புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பிறகு, இந்த பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் ஏர் இந்தியா ஊழியர்களின் பணி நீக்கம் குறித்த கவலை எழுந்துள்ளது.
DGCA-வின் உத்தரவை ஏர் இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும், அந்த உத்தரவைச் செயல்படுத்தியதாகவும் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். இடைக்காலமாக, ஒருங்கிணைந்த செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்திற்கு (IOCC) நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி நேரடி மேற்பார்வை வழங்குவார். பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு முழுமையான அனுசரணையை உறுதி செய்வதற்கு ஏர் இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளது என்று அவர் கூறினார்.