Ambedkar: சமத்துவத்திற்காய் இந்த மண்ணில் உழைத்த மகத்தான தலைவர் அம்பேத்கர் நினைவு நாள்!
அம்பேத்கரின் நினைவு நாளான இன்று அவர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் ஹிந்துஸ்தான் டைம் தமிழ் பெருமிதம் கொள்கிறது

அம்பேத்கர் (PTI)
எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறானோ யார் ஒருவன் பொது விமர்சனத்திற்கு அச்சப்படாமல் இருக்கிறானோ அடுத்தவன் கண்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்றிருக்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் என்பேன் என்றார் அம்பேத்கர்.
அவரது நினைவு நாளில் அவர் குறித்த சில தகவல்களை இங்கு திரும்பி பார்க்கலாம்.
பிறப்பு
பிரிட்டிஷ் இந்தியாவில் மத்திய பிரதேசம் பகுதியில் மாவ் என்ற இடத்தில் 1891ல் ஏப்ரல் 14 ல் பிறந்தார். அம்பேத்கரின் தந்தை ராம்ஜி மாலோஜி ஜக்பால் தாய் பீமா பாய். இந்த தம்பதியின் 14 வது குழந்தையாக பிறந்தார்.