ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தளபதி அப்துல் ரவூப் அசார் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பலி!
ஆபரேஷன் சிந்தூர், பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் மற்றும் முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் தளம் உட்பட ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்தது.

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தளபதி அப்துல் ரவூப் அசார் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பலி!
சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரும், ஐசி-814 ஏர் இந்தியா விமானக் கடத்தலின் மூளையாகச் செயல்பட்டவருமான அப்துல் ரவூப் அசார், இந்திய ஆயுதப் படைகள் நடத்திய'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரவூப் அசார், தனது சகோதரரும் மற்றொரு பயங்கரவாதியுமான மசூத் அசாரால் நிறுவப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்தார். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்தியாவால் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவராக அவர் இருந்தார்.
குறிப்பாக 2007 ஆம் ஆண்டு அவரது சகோதரர் தலைமறைவான பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நடவடிக்கைகளில் அவர் குறிப்பிடத்தக்க நபராக இருந்தார்.