பதிலடிக்கு காத்திருங்கள்.. விமானப்படை தள தாக்குதலுக்கு பின் இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  பதிலடிக்கு காத்திருங்கள்.. விமானப்படை தள தாக்குதலுக்கு பின் இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்

பதிலடிக்கு காத்திருங்கள்.. விமானப்படை தள தாக்குதலுக்கு பின் இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்

Malavica Natarajan HT Tamil
Published May 10, 2025 08:15 AM IST

இந்திய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் பாகிஸ்தானின் மூன்று விமான தளங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் பாகிஸ்தானின் பதிலடிக்கு இந்தியா காத்திருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பதிலடிக்கு காத்திருங்கள்.. விமானப்படை தள தாக்குதலுக்கு பின் இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்
பதிலடிக்கு காத்திருங்கள்.. விமானப்படை தள தாக்குதலுக்கு பின் இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் விமான தளங்கள் மீது தாக்குதல்

ராவல்பிண்டி மாவட்டம் சக்லாலாவில் உள்ள நூர் கான் விமான தளம், ஜாங் மாவட்டம் ஷோர்கோட்டில் உள்ள ரதிஃபிகி விமான தளம் மற்றும் சக்வாலில் உள்ள முரித் விமான தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளம், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

'டெல்லி மீது தாக்குதல்'

அத்தோடு, நாங்கள் ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தியுள்ளோம். டெல்லி மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. ராணுவ செய்தித் தொடர்பாளர் தனது கூற்றுக்களை நிரூபிக்க எந்த விவரங்களையும் வழங்கவில்லை. அத்தோடு இந்தியாவின் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

'பாகிஸ்தான் சொத்து பாதுகாப்பாக உள்ளது'

இந்தியாவின் சில ஏவுகணைகள் பஞ்சாபையும், சில ஆப்கானிஸ்தானுக்குள்ளும் சென்றன என்றும் ஷரீப் கூறினார். அத்தோடு, பாகிஸ்தான் விமானப்படையின் அனைத்து சொத்துக்களும் பாதுகாப்பாக உள்ளன” என்றும் அவர் கூறினார்.

இந்தியா தனது ஜெட் விமானங்களுடன் வான்-தரை ஏவுகணைகளை ஏவியுள்ளது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு பல ஏவுகணைகளை இடைமறித்து அழித்தது என்றும் அவர் கூறினார்.

'பாகிஸ்தான் பதிலடி தரும்'

இது பிராந்தியத்தை கொடிய போருக்குள் தள்ளும் இந்தியாவின் ஒரு "தீய செயல், இந்த ஆக்கிரமிப்புக்கு பாகிஸ்தான் பதிலளிக்கும். எங்கள் பதிலுக்காக இந்தியா காத்திருக்க வேண்டும்" என்றும் சவுத்ரி பேசியுள்ளார். இதையடுத்து, அவர் எந்த கேள்வியும் கேட்காமல் பத்திரிகையாளர் சந்திப்பை திடீரென முடித்துக் கொண்டார்.

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பாஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்துர்' தொடர்பாக இந்தியாவுடனான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் இவ்வாறு கூறியுள்ளார்.

விமான போக்குவரத்து நிறுத்தம்

பாகிஸ்தானின் வான்வெளி அனைத்து வகையான விமானப் போக்குவரத்திற்கும் காலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) அறிவித்துள்ளது. நண்பகல் 12 மணிக்கு அடுத்தக்கட்ட அறிவிப்பை பகிர்வதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல்கள் முறியடிப்பு

வியாழன் மாலை, ஜம்மு விமான நிலையம் உட்பட ஜம்முவின் எல்லைப் பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ஏவிய குறைந்தது 8 ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு பிரிவுகள் இடைமறித்து அழித்தன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல் குஜராத் வரை இந்தியாவில் 26 இடங்களில் பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை இரண்டாவது இரவாக ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடங்கியது. விமான நிலையங்கள் மற்றும் விமான தளங்கள் உட்பட முக்கியமான நிறுவல்களைத் தாக்கும் எதிரியின் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.