J&K Accident: பாதுகாப்பு படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது - 6 பேர் பலி
ஜம்மு-காஷ்மீரில் இந்தோ - திபெத் படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் இந்தோ - திபெத் படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் பொதுமக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் பேருந்து பிரேக் பிடிக்காமல் ஆற்றில் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து பஹல்காம் போலீசார் கூறுகையில், சந்தன்வாரி மற்றும் பஹல்காம் இடையே பேருந்து சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த வீரர்கள் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் இருந்து திரும்பியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்