தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  4 Killed Due To Lighting Strike In Andhra Pradesh

Andhra Pradesh: ஆந்திராவில் மின்னல் தாக்கி 4 விவசாயிகள் பலி

Karthikeyan S HT Tamil
Aug 17, 2022 04:40 PM IST

ஆந்திராவில் மின்னல் தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

மின்னல் தாக்கி 4 விவசாயிகள் பலி
மின்னல் தாக்கி 4 விவசாயிகள் பலி

ட்ரெண்டிங் செய்திகள்

ஆந்திராவின் எலுரு மாவட்டம் போகோல் கிராமத்தில் சிலர் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தனர். வேலைக்கு இடையே சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக வயலில் உள்ள கூடாரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு எலுருவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உயர் சிகிச்சைக்காக விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இறந்தவர்கள் கொண்டபாபு, ராஜீ, தர்மராஜீ, வேணு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் காக்கி நாடா மாவட்டம் அன்னைவரத்தில் இருந்து விவசாய வேலைக்காக வந்திருந்தனர். சடலங்கள் பிரதேச பரிசோதனைக்காக எலுருவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்