தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  11 Year Old Boy Murdered In A Mob Clash

பீகாரின் சூப்பாலில் நிலத்தகராறில் 11 வயது சிறுவன் அடித்துக்கொலை

Priyadarshini R HT Tamil
Mar 25, 2023 05:15 PM IST

சுக்காசன் கிராமத்தில் இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது. 16 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் இடையில் வந்த சிறுவன் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தான்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தச் சம்பவம் சுகாசன் கிராமத்தில் நடைபெற்றது. 16 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பான பிரச்னையில், இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற தகராறில் குறுக்கே சென்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டான்.

ராஜேந்திர ஷா மற்றும் விலாஸ் ஷா ஆகிய இருவரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவருக்கும் அந்த கிராமத்தில் நிலத்தகராறு இருந்துவந்தது. 

இவ்விருவரின் தலைமையில் இரு குழுக்ககளாக அக்கிராம மக்கள் மோதிக்கொண்டனர். ராஜேந்திர ஷாவின் மகன் எதிர்தரப்பினரால் தாக்குதலுக்கு ஆளானார். இதையடுத்து, அந்தச்சிறுவனை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். இத்தகவலை கிஷீன்கஞ்ஜ் போலீஸ் நிலையத்தில் உள்ள மெஹபூப் ஆலம் கூறினார். 

போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். அவர்கள் சிறுவனை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்