Gardening Tips : பால்கனி அல்லது மாடித்தோட்டத்திலே மாதுளை வளர்க்கலாம்! இதோ எப்படி என்று பாருங்கள்!
மாடித்தோட்டத்தில் மாதுளை வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்.
நீங்கள் பால்கனி அல்லது மாடித்தோட்டத்திலே மாதுளையை வளர்க்க முடியும். அது எப்படி என்று பாருங்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் மாதுளை ஆகும். ஆனால் அதை தோலை நீக்கி, அதில் உள்ள முத்துக்களை உதிர்த்து சாப்பிடவேண்டும். பழங்களில் ராணி என்றால் அது மாதுளைதான். அதில் அவ்வளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. ஆனால் அதன் விலை எப்போதும் உங்களை வியப்பில் ஆழ்த்தும் தன்மை கொண்டது. சிலர் இந்தப் பழத்தை வீட்டு தோட்டத்திலே வளர்க்க விரும்புவார்கள். இதை வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்.
வீட்டில் வளர்க்கவேண்டும்?
உங்கள் வீட்டில் மாடித்தோட்டம் இருந்தாலோ அல்லது வீட்டில் தோட்டம் இருந்தாலோ நல்லது. அந்த இடத்தில் நேரடியான சூரிய ஒளி கிடைக்கவேண்டும். மாதுளைக்கு நாள் முழுவதும் நேரடி சூரிய ஒளி இருக்கவேண்டும். எனவே நீங்கள் வீட்டிலேயே மாதுளையை வளர்க்க ஏற்ற வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
விதை அல்லது நாற்றுகள்
வீட்டிலேயே நீங்கள் மாதுளையை வளர்க்கவேண்டுமெனில், அதற்கு நீங்கள் நர்சரி கார்டனில் இருந்து நாற்றுக்களை வாங்கி வந்து நட்டு வைத்து வளர்க்கும் வழிதான் சிறந்தது. விதைகளை இட்டு வளர்ப்பது நல்ல வழி கிடையாது. எனவே ஆரோக்கியமான மாதுளை நாற்றுக்களை நர்சரி கார்டனில் இருந்து வாங்கி வளருங்கள். இது உங்கள் மிக விரைவில் பழங்களைக் கொடுக்கும். நீங்கள் தொட்டியில் நடும்போது ஆழமான மற்றும் அகலமான தொட்டியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
தொட்டி
20 இன்ச்கள் ஆழம் கொண்ட தொட்டியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். நல்ல அகலமான தொட்டியாக இருக்கும்போதுதான், வேர்கள் பற்றிப்படர்ந்து வளரும். எனவே தொட்டியில் அதிகப்படியாக ஊற்றும் தண்ணீர் வெளியேற போதிய துவாரங்கள் உள்ளதா என்பதையும் பாருங்கள். துவாரம் இல்லாவிட்டால், தண்ணீர் தேங்கி, வேர் அழுகிவிடும்.
மண்
மாதுளைக்கு கொஞ்சம் அமிலம் கலந்தது முதல் மிதமான மண் தேவை. மண்ணில் 5.5 முதல் 7 வரையில் அதன் அமிலத்தன்மை இருக்கவேண்டும். மண்ணும் கலவையான மண்ணாக இருக்கவேண்டும். தோட்ட மண், உரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் தேங்காய் நார் உரம், பூச்சிக்கொல்லிகள் என அந்த மண்ணில் கலவையான மண்ணாக இருக்கவேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக மண்ணை மாற்ற வேண்டுமெனில், அதில் ஆர்கானிக் உரங்களை இடவேண்டும்.
சூரிய ஒளி
மாதுளைக்கு இந்திய கால நிலை மிகவும் பிடிக்கும். இங்குதான் சூரிய ஒளி ஈரப்பதம் என இரண்டும் கலந்து இருக்கும். இது செடி வளரவும், பூக்கள் விடவும், பழங்கள் விளையவும் உதவும். தினமும் 6 மணி நேரம் நேரடி சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் தொட்டியை வைக்கவேண்டும். மேலும் சிறிது நேரம் மறைமுக சூரிய ஒளியும் தேவை.
செடிக்கு தேவையான தண்ணீர்
செடிக்கும் அதிகம் தண்ணீரும் ஊற்றிவிடக்கூடாது. கொஞ்சம் தண்ணீரும் ஊற்றக்கூடாது. தண்ணீர் ஊற்றுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். குறிப்பாக வறட்சி காலத்தில் தாவரங்கள் பூவிடத் துவங்கும். அப்போது தொடர் ஈரம் இருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துங்கள்.
மாதுளைக்கு உரமிடவேண்டும்
மாதுளை எடை அதிகம் கொண்டபழமாகும். இதனால் மாதுளைக்கு நேரத்தில் பழம் வர அதிக உரமிடத் தேவையில்லை. ஆர்கானிக் உரம் ஒவ்வொரு இரு மாதத்துக்கும் ஒருமுறை இடவேண்டும். பழம் வளரும் மாதத்தில் இட்டால் போதும். குறிப்பாக பூக்கள் விடும்போது உரம் தேவை.
கிளைகளை களைதல்
இலை விடும் தருணத்தில் கிளைகளை அகற்றுவது அவசியம். ஏனெனில் அதிகப்படியான இலைகள், பழங்களை வளரவிடாது. எனவே அவற்றை அகற்றுவது அவசியம். இறந்த அல்லது வலுவில்லாத கிளைகளை அகற்றுவது அவசியம். இது பழம் மற்றும் பூக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கிடைக்கச் செய்யும்.
பூச்சிகளை அகற்றுவது எப்படி?
மாதுளையில் வழக்கமான தோட்டத்து பூச்சிகள் வரும். குறிப்பாக வண்டுகள் மற்றும் பறக்கம் பூச்சிகள் அதிகம் வரும். இது உங்கள் செடிகளை சேதப்படுத்தும். செடிகளில் பூச்சிகளைப் பார்த்தால், உடனடியாக 10 மில்லி லிட்டர் வேப்ப எண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியில் தெளித்து விடுங்கள்.
பழம் வர எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும்?
நல்ல ஆரோக்கியமான நாற்றுக்களில் இருந்து முளைத்து வரும் செடி அல்லது மரம், ஆண்டுக்கு 10 மாதங்கள் பழம் கொடுக்கும். இது சூரிய ஒளி மற்றும் உரத்தைப் பொறுத்து அதிகமாகும். பிரகாசமான சிவப்பு பூக்கள் முதலில் தோன்றும். இது அடுத்ததாக சிறிய பழங்களாக முளைக்கத் துவங்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்