உங்கள் வீட்டு தோட்டம் அல்லது பால்கனியிலேயே கிவிப்பழங்களை வளர்க்க முடியும்! நோய் எதிர்பை அதிகரிக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் வீட்டு தோட்டம் அல்லது பால்கனியிலேயே கிவிப்பழங்களை வளர்க்க முடியும்! நோய் எதிர்பை அதிகரிக்கும்!

உங்கள் வீட்டு தோட்டம் அல்லது பால்கனியிலேயே கிவிப்பழங்களை வளர்க்க முடியும்! நோய் எதிர்பை அதிகரிக்கும்!

Priyadarshini R HT Tamil
Updated Dec 01, 2024 10:26 AM IST

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கிவி பழங்களை வீட்டிலே வளர்ப்பது எப்படி?

உங்கள் வீட்டு தோட்டம் அல்லது பால்கனியிலேயே கிவிப்பழங்களை வளர்க்க முடியும்! நோய் எதிர்பை அதிகரிக்கும்!
உங்கள் வீட்டு தோட்டம் அல்லது பால்கனியிலேயே கிவிப்பழங்களை வளர்க்க முடியும்! நோய் எதிர்பை அதிகரிக்கும்!

கிவிப்பழத்தை வீட்டில் வளர்ப்பது எப்படி?

கிவிப்பழங்களை வீட்டிலேயே வளர்க்கவேண்டும் என்றால், அதற்கு சுலபமான மற்றும் விலை குறைவான வழியாக அதன் விதைகளை தேர்ந்தெடுத்து விதைப்பது உள்ளது. கடையில் இருந்து கிவிப்பழங்களை வாங்கிக்கொள்ளுங்கள். அவை அதிகம் பழுத்ததாக இருக்கக்கூடாது. புதிதாக வந்த பழங்களாக மட்டும் இருக்கவேண்டும். அவற்றை அழுத்தினால் அவை மீண்டும் அந்த ஷேப்புக்கு வந்துவிடவேண்டும். அதுபோன்ற பழங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

விதைகளை வெளியே எடுங்கள்

இப்போது கிவியின் தோலை நீக்கிவிட்டு, அதை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். இந்த துண்டுகளை தண்ணீரில் சேருங்கள். நன்றாக இவற்றை பிசைந்தால், சதைகளும், விதைகளும் விரைவில் பிரிந்து வரும். இதை ஒரு சல்லடை வைத்து வடிகட்டுங்கள், விதைகளை தனியாக எடுங்கள். இப்போது உங்களுக்கு விதைகள் கிடைத்துவிடும்.

விதைகளை காய வைக்கவேண்டும்

இப்போது, ஒரு டிஷ்யூ பேப்பரில் விதைகளை வைத்து அவற்றை காயவையுங்கள். அதில் வெறும் விதைகள் மட்டும்தான் இருக்கவேண்டும் தண்ணீர் மற்றும் சதைகள் இருக்கக்கூடாது. இதை வெயிலில் ஒரு மணி நேரம் நன்றாக காய வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம்.

நடவு

விதைகள் நன்றாக உலர்ந்து தனித்தனியாக ஒன்றுடன் ஒன்ற ஒட்டாமல் வரவேண்டும். இதன் விதைகள் குட்டியாக இருக்கும். எனவே அதை கவனமுடன் கையாள வேண்டும். முதலில் விதைகளை முளைக்க வைக்கவேண்டும். காய்ந்த விதைகளை நீங்கள் தோட்டத்தில் நடவிரும்பினால் மண்ணில் நேரடியாக தூவிவிடவேண்டும். தொட்டியில் வைக்க விரும்பினால் தொட்டியில் தூவிவிடவேண்டும். தொட்டியிலோ அல்லது தோட்டத்திலோ உள்ள மண், தோட்ட மண்ணாக இருக்கவேண்டும். அதில் தோட்ட மண், உரம், கம்போஸ்ட் கலந்த கலவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மண்ணாக அது இருக்கவேண்டும். நீங்கள் தொட்டியில் வைத்தால் தண்ணீர் போக போதிய துவாரங்கள் அதில் இருக்கவேண்டும். ஏனெனில் துவாரங்கள் இல்லாவிட்டால், தண்ணீர் விதைகளை சிதைத்துவிடும்.

முதல் இலை

விதை போட்டவுடன் சூரியனை மறைக்கும் இடத்தில் தொட்டியை வைக்கவேண்டும். தோட்டத்தில் நடும்போதும் அதற்கு ஏற்ற இடத்தை தேர்ந்தெடுத்து வையுங்கள். அந்த இடம் அல்லது தொட்டியை ஒரு பாலித்தீன் கவர் அல்லது தொப்பி போட்டு மூடிவைக்கவேண்டும். அந்த மண்ணின் ஈரப்பதம்தான் முளைவிட உதவும். முதல் இலை 20 நாட்களில் தெரியும். அடுத்து நீங்கள் அதை பெரிய தொட்டிக்கு மாற்றிக்கொள்ளலாம்.

சூரிய ஒளி

பெரிய தொட்டிக்கு மாற்றியவுடன், தோட்டம் என்றால் அப்படியே விட்டுவிடலாம். அவற்றுக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் தினமும் நேரடி சூரிய ஒளி தேவை. எனவே அதை மட்டும் தினமும் உறுதிப்படுத்துங்கள். மற்ற நேரங்களில் மறைமுக சூரிய ஒளி கிடைத்தால் போதும். ஏனெனில் சூரிய ஒளி அதிகம் கிடைத்தால், இலை கருகிவிடும்.

தண்ணீர்

மண்ணை எப்போது ஈரப்பதத்துடன் வைத்திருக்கவேண்டும். ஆனால் சொதசொதவென ஈரம் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வேர்கள் மற்றும் சிறிய இலைகள் அழுகிவிடும். எனவே தினமும் கொஞ்சம் மட்டும் தண்ணீர் ஊற்றவேண்டம். வறண்டு காணப்படும் நேரங்களில் மண் மற்றும் இலைகளில் கொஞ்சம் தண்ணீர் தெளித்துவிடவேண்டும்.

வளர்ச்சி

இலைகள் மேலும் வளர்ந்தவுடன், அவற்றுக்கு கொஞ்சம் கூடுதல் சப்போர்ட் தேவைப்படும். எனவே மூங்கில் குச்சிகள் அல்லது வேறு குச்சிகளை வைத்து முட்டுகொடுக்கவேண்டும். அப்போதுதான் செடிகள் நன்றாக வளரும். செடிகளை குச்சிகளுடன் சேர்த்து நன்றாக கட்டி வளரவிடவேண்டும்.

பூ பூக்கும் தருணம்

பழம் கொடுப்பதற்கு முன்னர், அது பூக்கள் பூக்கும். வெள்ளைப் பூக்கள், பொன்னிறமான மற்றும் கருப்பு மொட்டுக்களுடன் கிடைக்கும். பழம் வரும் முன்னர் இது தோன்றும்.

பழம்

நீங்கள் சரியான அளவில் உரமிட்டு வளர்த்து வந்தால், கிவி 3 முதல் 5 ஆண்டுகளில் வளர்ந்துவிடும். இது நல்ல இலைகளுடன் அடர்ந்து, படர்ந்து வளரும். எனவே இவற்றை நீங்கள் தொடர்ந்து வெட்டிக்கொண்டே இருக்கவேண்டும். இதனால் பழுக்கும் நேரத்தில் நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.