World Paper Bag Day 2024 : உலக பேப்பர் பை தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் பல முக்கிய தகவல்கள் என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  World Paper Bag Day 2024 : உலக பேப்பர் பை தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் பல முக்கிய தகவல்கள் என்ன தெரியுமா?

World Paper Bag Day 2024 : உலக பேப்பர் பை தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் பல முக்கிய தகவல்கள் என்ன தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Updated Jul 12, 2024 05:29 AM IST

World Paper Bag Day 2024 : உலக பேப்பர் பை தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் பல முக்கிய தகவல்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

World Paper Bag Day 2024 : உலக பேப்பர் பை தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் பல முக்கிய தகவல்கள் என்ன தெரியுமா?
World Paper Bag Day 2024 : உலக பேப்பர் பை தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் பல முக்கிய தகவல்கள் என்ன தெரியுமா?

மளிகை கடைகள் முதல் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் கடைகள் வரை எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இந்த பாலித்தீன் பைகள், கடந்த காலங்களில் இது மிகவும் அதிகம் ஆகும். ஆனால் தற்போது மக்களிடம் விழிப்புணர்வு இருந்தாலும், அது கட்டுப்படுத்தும் அளவில் இல்லை என்றுதான் கூறமுடியும்.

நமது பூமிக்கு இந்த ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் மண்ணுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களை வழங்கி வருகின்றன. இதை எதிர்த்து போராட பெரும் இயக்கங்கள் உருவெடுத்தன.

பாலித்துதீன் பைகள் மக்குவதற்கு பல நூற்றாண்டுகள் ஆவதுடன், அவை விலங்குகளுக்கும், கடலும், நிலத்துக்கும் பெரும் ஆபத்தை கொண்டுவரக்கூடியவை. சுற்றுச்சூழலை சுழற்சியிலும் இவை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

எனவே பல்வேறு இயக்கங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பாலித்தீன் பைகளுக்கு மாற்றாகக் கொண்டுவந்தன. இதனால் பேப்பர் பைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்பட்டு தயாரிக்கப்பட்டன. அது பிரபலமடைந்தது. இது பசுமை பூமியை உருவாக்குவதையும், பொருட்களை எடுத்துச்செல்லவும் உதவின.

உலக பேப்பர் பைகள் தினம், சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாலித்தீன் பைகளுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவதை அங்கீகரித்து, அதை கொண்டாடுகிறது.

பேப்பர் பைகள் தினத்தின் நோக்கமே சுற்றுச்சூழலுக்கு உகந்த பேப்பர் பைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்.

இந்த நாள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேப்பர் பைகளை நாம் பயன்படுத்துவது குறித்து நமக்கு நினைவூட்டுகிறது. தினசரி அன்றாட வாழ்வில், ஒவ்வொருவரும் பேப்பர் பைகளை மக்களுக்கும், வணிக நிறுவனங்களும் பயன்படுத்தவேண்டும் என்றும், நீடித்த வளர்ச்சி மாற்றுகளுக்கு நாம் மாறவேண்டும் என்றும் இந்த நாள் நம்மை ஊக்கப்படுத்துகிறது.

தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 12ம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. நாம் பாலித்தீன் பைகளுக்கான மாற்றாக பேப்பர் பைகளை உபயோகிக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் கோடிட்டு காட்டுகிறது.

வரலாறு

1852ம் ஆண்டு பிரான்சிஸ் வூலி என்பவர் பேப்பர் பைகள் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தது வரலாற்று ரீதியாக இந்த நாளின் துவக்கமாகக் கொள்ளலாம். இதனால் பேப்பர் பைகள் குறித்த புரட்சியும் ஏற்பட்டது. பரவலாக பொருட்களை பேக் செய்வதற்கு இதன் பயன்பாடும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

20ம் நூற்றாண்டி பாலித்தின் பைகள் பிரபலமடைந்தன. இவை பயன்படுத்த எளிதானவை மற்றும் செலவும் குறைவு. ஆனால், பாலித்தீன் பைகளைப் பயன்படுத்துவதால், நமது சுற்றுச்சூழல் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது என்ற விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரித்தது. இதையடுத்து பேப்பர் பைகளின் பயன்பாடு அதிகரிக்கத் துவங்கியது.

1999ம் ஆண்டு முக்கியமான திருப்பமாக, சான் பிரான்சிஸ்கோ நகரம், பாலித்தீன் பைகளுக்கு எதிராக அவற்றை மளிகை, மருந்து கடைகளில் பயன்படுத்துவதை தடைசெய்து, ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. உலகிலேயே பாலித்தீன் பைகளை தடை செய்த முதல் நகரமாக அது இருந்தது.

இந்த நடவடிக்கை, மற்ற நகரங்கள், தேசங்கள் என உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டது. அது பேப்பர் பைகளின் மீது மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து உலக பேப்பர் பைகள் தினம் சர்வதேச நிகழ்வாக மாறியது. இதை பல்வேறு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என அனைத்திலும், பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்றாக பேப்பர் பைகள் பயன்பாடு முன்னிலைப்படுத்தப்பட்டது.

முக்கியத்துவம்

நாம் நீடித்த ஒரு பூமியை உருவாக்க வேண்டுமெனில் பேப்பர் பைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுவே இந்த நாளின் முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது. நமது புவியில் பாலித்தீன் பைகள் ஏற்படுத்து அழிவுகளை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. இவை மக்காமல் இயற்கைக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவை.

இந்த பாலித்தீன் பைகள் நிலங்கள் மற்றும் கடலில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நாம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு, தூக்கி எறியும் இவை, நிலம் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதிக்கிறது. எனவே நாம் பேப்பர் பைகளை அதிகம் உபயோகித்து, பாலித்தின் பை கழிவுகள் பெருகுவதை தடுத்து, நமது கிரகத்தை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதில் பங்கெடுப்போம்.

பேப்பர் பைகள் பயன்படுத்துவதால், பல நன்மைகள் உள்ளதால் அவை முதன்மை தேர்வாக உள்ளன. இவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்தில் இருந்து உருவாக்கப்பட்டவை. எளிதில் மக்கக் கூடியவை.

இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யமுடியும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இன்றி அழிக்கவும் முடியும். இந்த குறிபிடத்தக்க நன்மைகள் பேப்பர் பைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாக வைத்துள்ளது.

இந்த நாளின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலுக்கு பாலித்தீன் பைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். பேப்பர் பைகள் பயன்பாட்டை ஊக்குவிப்பது இந்த நாளின் நோக்கம் ஆகும். மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களை நாம் அனைத்திலும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும்.

விழிப்புணர்வை ஏற்படுத்தி, பேப்பர் பைகள் பயன்பாட்டை பரவலாக்கி, நிலையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவோம்.