விழி இல்லாதோருக்கும் இந்த வழி உண்டு! உலக பிரெய்லி தினம்! எப்படி உருவானது தெரியுமா? கரு முதல் நோக்கம் வரை!
இந்த உலகம் அனைவருக்குமானது தான். குறை இல்லாதவர்கள் மட்டும் எளிதாக அணுகும் வசதியை கொடுத்து விட்டு மாற்றுத் திறனாளிகளை கண்டுகொள்ளாமல் அவர்களை கண்டு பாவப்பட்டு உதவி செய்வதை பெருமையாக கருதும் சேடிஸ்ட் மன நிலையில் இருந்து வெளி வர வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் பிரம்மாண்ட விளக்குகள் வந்து நமது இரவையும் பகல் போல ஒளிரச் செய்கின்றன. ஆனால் இரவு நேரங்களில் மின்சார இணைப்பு தூண்டிக்கப்படும் போது நாம் சற்று திணறி விடுகிறோம். பிறந்ததில் இருந்து ஒளி தெரியாமல் இருப்பவர்கள் தான் பார்வை மாற்றுத்திறனாளிகள். நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத ஒரு உலகம் தான் அவர்களையுடையது. அவர்கள் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது உதவியோ, கருணையோ இல்லை. வாழ்வதற்கான சமமான வாய்ப்பு. சமமான நடத்தை தான். ஆனால் நமது பொது இடங்களை எல்லாவருக்குமான ஓர் இடமாக மாற்ற முயர்ச்சிக்கமால் அவர்கள் மீது பட்சாதாபம் கொள்கிறோம்.
பிரெய்லி எனும் சாதனையாளன்
1809 இல் பிரான்சின் பாரிசில் பிறந்த லூயிஸ் பிரெய்லி என்பவர் தான் பார்வையற்றோர் படிப்பதற்கான இந்த எழுத்து வடிவத்தை கண்டறிந்தார். அவரை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாளான ஜனவரி 4 ஒவ்வொரு ஆண்டும் உலக பிரெய்லி தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிரெய்லி பிறக்கும் போது கண்களோடு தான் பிறந்தார். எதிர்பாரா விதமாக சிறு வயதில் நடந்த ஒரு விபத்தில் ஊசியால் கண்கள் பாதிக்கப்பட்டு பறிபோகின.
கண்கள் போனதற்கு விதியை குறை கூற வில்லை. துணிந்து களத்தில் குதித்தார். தான் படித்த கண் பார்வையற்றோருக்கான (Royal Institute of Blind Youth) சிறப்பு பள்ளியில் படித்தார். அங்கு அங்கு போரில் பயன்படுத்தப் படும் வாலன்டின் ஹேய் எழுத்து முறையை பார்வை இல்லாதவர்களுக்கு எளிமையாக 6 புள்ளி கொண்டதாக மாற்றி அமைத்தார். இப்பொழுது உலகின் எந்த மூலையில் உள்ளவர்களும் பார்வை இல்லாததை கடந்து எளிமையாக கல்வி கற்க முடிகிறது என்றால் அதற்கு பிரெய்லியின் சாதனையே காரணமாகும்.
நோக்கம்
பார்வையற்றவர்கள் அல்லது பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு அணுகல் மற்றும் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதே உலக பிரெய்லி தினத்தின் முக்கிய நோக்கமாகும். உணவகங்கள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பல நிறுவனங்கள், மெனுக்கள், அறிக்கைகள் மற்றும் பில்கள் போன்ற தங்கள் அச்சுப் பொருட்களின் பிரெய்லி பதிப்புகளை வழங்குவதில்லை என்பது இன்றைய யதார்த்தம். இதன் காரணமாக, பார்வைக் குறைபாடுகள் உள்ளவர்கள் அல்லது பார்வைக் குறைபாடுகள் உள்ளவர்கள் பெரும்பாலும் தாங்களாகவே உணவைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது தங்கள் நிதிகளைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கவோ சுதந்திரம் இல்லை.
இந்த நாள் பிரெய்லி மற்றும் பிற அணுகக்கூடிய தொடர்பு வடிவங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புகிறது. திறனைப் பொருட்படுத்தாமல், அனைவரும் ஒரே மாதிரியான தங்குமிடங்கள் மற்றும் சேவைகளுக்கு தகுதியானவர்கள் (மற்றும் சட்டப்பூர்வமாக உரிமை பெற்றவர்கள்). அதை நினைவில் வைத்துக் கொண்டு, நமது பணியிடங்களை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு நமது பங்கைச் செய்வோம்.
பிரெய்லி எழுத்தறிவைக் கொண்டாடுங்கள்
பார்வையற்றவர்களுக்கு சம வாய்ப்புகளில் பிரெய்லி எழுத்தறிவும் ஒரு முக்கிய காரணியாகும். இன்று, ரூபிக்ஸ் க்யூப்ஸ், கைக்கடிகாரங்கள், லெகோ-பாணி செங்கல்கள் மற்றும் பிற கண்டுபிடிப்புகள் நாம் பிரெய்லியைப் பயன்படுத்தும் விதத்தை தொடர்ந்து மாற்றி வருகின்றன, மேலும் பிரெய்லி எழுத்தறிவை அதிகரிக்கவும் உதவுகின்றன. அதனால்தான் நீங்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் பொருட்களில் பிரெய்லியைக் காணலாம் - அடையாளங்கள், ஏடிஎம்கள், லிஃப்ட், கால்குலேட்டர்கள் மற்றும் பல உள்ளன.
இந்த உலகம் அனைவருக்குமானது தான். குறை இல்லாதவர்கள் மட்டும் எளிதாக அணுகும் வசதியை கொடுத்து விட்டு மாற்றுத் திறனாளிகளை கண்டுகொள்ளாமல் அவர்களை கண்டு பாவப்பட்டு உதவி செய்வதை பெருமையாக கருதும் சேடிஸ்ட் மன நிலையில் இருந்து வெளி வர வேண்டும். பிரெய்லி முறையை எல்லா இடங்களிலும் கொண்டு வருவதே அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான உதவி.
டாபிக்ஸ்