Winter Tea : குளிர் காலத்தில் பருக ஏற்ற 5 வகை டீக்கள்! உடலை இதமாக்க உதவுவதாக நம்பப்படுகிறது!
Winter Tea : குளிர் காலத்தில் பருக ஏற்ற சூடான பானங்கள் என்னவென்று பாருங்கள்.

குளிர் காலத்தில் நீங்கள் பருக ஏற்ற மூலிகை பானங்கள் எவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். குளிர் காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். குளிரும் அதிகம் இருப்பதால், உங்களுக்கு எப்போதும் சூடாக எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும். சூடான ஒரு கப் டீ, உங்களுக்கு குளிருக்கு இதமாக இருக்கும். இதை நீங்களே கட்டாயம் உணர்ந்து இருப்பீர்கள். அது தரும் இதம் உங்களின் குளிரையே விரட்டும். அதிலும் குளிர் காலத்தில் நீங்கள் இந்த 5 மூலிகை தேநீரை பருகினால் குளிரை அடித்து விரட்டுவதுடன், அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் கொடுக்கிறது. அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
துளசி டீ
துளசி ஆயுர்வேத மருத்துவத்தில் சளியைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மூலிகை என்பது அனைவரும் அறிந்ததே. இதில் உள்ள அடாப்டோஜெனிக் குணங்கள் அதற்கு உதவுகின்றன. அடாப்டோஜெனிக் என்றால், மனஅழுத்ததின் தீங்குகளை எதிர்க்கும் தன்மை என்று பொருள். இது உங்கள் உடலின் அழுத்தைப் போக்கி, உங்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. இதன் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள், உங்கள் சுவாச மண்டல ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
புதினா டீ
புதினாவில் உள்ள புத்துணர்வு தரும் குணம் உங்களுக்கு இதமளிக்கும். இதில் உள்ள மென்தால் எனும் உட்பொருள் உங்களுக்கு மூக்கடைப்பு மற்றும் சுவாச மண்டலத்தில் சளி அடைத்திருப்பதை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. இது குளிர் காலத்தில் சளி என்பது மிகவும் எளிதாக அனைவருக்கும் ஏற்படும் பிரச்னையாகும். இது சுவாச மண்டலத்தைப் பாதுகாப்பதுடன், உங்களின் செரிமான ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இது உங்களின் வயிற்றில் உள்ள அசவுகர்யங்களைப் போக்குகிறது. இது உங்களுக்கு வயிறு உப்புசத்தை சரிசெய்கிறது.
இஞ்சி மற்றும் மஞ்சள் டீ
இந்த இஞ்சி மற்றும் மஞ்சள் கலந்து நீங்கள் பருகும் தேநீரில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இஞ்சி உங்கள் உடலை வெதுவெதுப்புடன் வைத்துக்கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது. மஞ்சள் உங்கள் உடலுக்குத் தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொடுக்கிறது. இது உங்களுக்கு குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் தொண்டை தொற்றுக்களைப் போக்க உதவுகிறது.
சாமந்திப் பூ டீ
சாமந்திப்பூ டீ , உங்களுக்கு இதமளிக்கும் மற்றும் உங்களை அமைதிப்படுத்தும் குணங்கள் நிறைந்தது என்று கூறப்படுகிறது. இது உங்களின் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இது உங்களின் மனஅழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது. இது உங்களின் வயிற்றுக்கு இதமளிக்கிறது. இது உங்களுக்கு செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளை குணப்படுத்த உதவுகிறது.
பட்டை டீ
பட்டையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது என்று நம்பப்படுகிறது. இந்த மசாலாப்பொருள் உங்கள் ரத்த சர்க்கரை அளவுகளை முறைப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தததாக நம்பப்படுகிறது. இது உங்களுக்கு குளிர் நாட்களுக்குத் தேவையான இதத்தை கொடுக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள தேநீர் அனைத்தும் குளிர் காலத்தில் உங்களுக்கு இதமளிக்கும், ஆரோக்கியமும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இவற்றை பருகி, குளிர் காலத்தை இதமாக்கிக்கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்