பொங்கல் சாப்பிட்டால் ஏன் தூக்கம் வருகிறது தெரியுமா? இது தான் காரணமா!
இந்தியாவின் தென் மாநிலங்களில் பரவலாக சாப்பிடப்படும் உணவாக பொங்கல் இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ் நாட்டில் இது இன்றியமையாத உணவாகவு இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் பொங்கல் ஒரு வழக்கமான உணவாக மாறி விட்டது.

இந்தியாவின் தென் மாநிலங்களில் பரவலாக சாப்பிடப்படும் உணவாக பொங்கல் இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ் நாட்டில் இது இன்றியமையாத உணவாகவு இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் பொங்கல் ஒரு வழக்கமான உணவாக மாறி விட்டது. மேலும் பொங்கலில் பாசிப்பருப்பு, முந்திரி பருப்பு மற்றும் மிளகு ஆகியவைகளை கலப்பதால் காலை நேரத்தில் சாப்பிடக்கூடிய ஊட்டச்சத்து உணவாக இது இருந்து வருகிறது. இருப்பினும் பொங்கல் சாப்பிட்டு செல்லும் போது அதிகமாக தூக்கம் வரும் சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பலர் பொங்கல் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.
பொதுவான காரணங்கள்
பொங்கல் சாப்பிடும் போது தூக்கம் வருவதற்கு பொதுவான காரணங்கள் சில கூறப்படுகின்றன. அதில் முக்கியமானதாக வெண்பொங்கலில் சேர்க்கப்படும் பொருட்களால் அதனை சாப்பிடு போது வயிறு முழுவதும் நிறைந்து விடுகிறது. இதன் காரணமாக பசி எதுவும் ஏற்படுவதில்லை. எனவே ஒரு மந்தமான உணர்வு உண்டாகிறது. இதனால் தூக்கம் வருகிறது எனக் கூறப்படுகிறது. மேலும் வெண்பொங்கலில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் உள்ளது. உடலில் கார்போஹைட்ரேட் சேரும் பொது தூக்கம் வருவது இயல்பான ஒரு நிலை என நம்பப்படுகிறது.
உண்மையான காரணங்கள்
பொங்கல் அதிக கார்போஹைட்ரேட்டுகளை கொண்டுள்ளதால் உடலில் நுழைந்த உடன் செரிமானம் அடைகிறது. இது செரிமானம் அடைவதால் அதிகமான இன்சுலின் சுரக்கிறது. குறிப்பாக இந்த இன்சுலின் தூக்கத்தை தடுக்கும் ஒரக்ஸின் எனும் சுரப்பியை பாதிக்கிறது. இதன் காரணமாக தூக்கம் வருகிறது. மேலும் உடலில் இன்சுலின் அதிகரித்தால், அது மூளையின் ஹைபோதலாமஸில் உள்ள MCH (Melanin-concentrating hormone) ஹார்மோனை வெளியீட்டு தூக்கத்தை உண்டாக்குகிறது.