மக்களின் சட்ட உரிமைகளை உறுதி செய்யவேண்டியது யார்? சமூக செயற்பாட்டாளர் கேள்வி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மக்களின் சட்ட உரிமைகளை உறுதி செய்யவேண்டியது யார்? சமூக செயற்பாட்டாளர் கேள்வி!

மக்களின் சட்ட உரிமைகளை உறுதி செய்யவேண்டியது யார்? சமூக செயற்பாட்டாளர் கேள்வி!

Priyadarshini R HT Tamil
Updated Jun 08, 2025 09:05 AM IST

ஜுன் 6ல் (2025) விசாரணைக்கு வந்த வழக்கில், தலைமைச் செயலாளர்கள் அறிக்கை தாக்கல் செய்யாததால், நீதிமன்றம், கோபமும், மிகந்த மனவேதனையும் அடைந்ததாக நீதிபதி. பட்டு தேவானந்த் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் சட்ட உரிமைகளை உறுதி செய்யவேண்டியது யார்? சமூக செயற்பாட்டாளர் கேள்வி!
மக்களின் சட்ட உரிமைகளை உறுதி செய்யவேண்டியது யார்? சமூக செயற்பாட்டாளர் கேள்வி!

சென்னை உயர்நீதிமன்றம் 1972-2023 வரை உள்ள 4 மனுக்கள் மீது, கருணை அடிப்படையிலான பணி நியமனம் 2023 சட்டப்படி, இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் பதிந்த வழக்கில் தனது உத்தரவை 2 மாதத்திற்குள் மாநில அரசு தனது குழுவின் அறிக்கைப்படி இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் பட்டியல் தயார் செய்து வைக்கவும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை 3 மாதத்திற்குள் நீதிமன்றம் முன் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் தற்போது வரை நீதிமன்ற உத்தரவை மதித்து செயல்படுத்தாத 2 தமிழக அரசு தலைமை செயலாளர்கள் (முருகானந்தம், சிவதாஸ் மீனா) மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971, அரசியல் சாசனப் பிரிவு 215ன் படியும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு (நீதிப் பிரிவு) உத்தரவிட்டு, அதற்கான காரணங்களை இருவரும் ஜுன் 20 தேதிக்குள் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது.

2020ல் கோயம்புத்தூரைச் சேர்ந்த நித்யா என்பவர், போக்குவரத்துத் துறையில் பணியின்போது இறந்த தனது தந்தையின் மரணத்தை தொடர்ந்து, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என பதிவு செய்த வழக்கிலும் உயர்நீதின்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜுன் 6ல் (2025) விசாரணைக்கு வந்த வழக்கில், தலைமைச் செயலாளர்கள் அறிக்கை தாக்கல் செய்யாததால், நீதிமன்றம், கோபமும், மிகந்த மனவேதனையும் அடைந்ததாக நீதிபதி. பட்டு தேவானந்த் குறிப்பிட்டுள்ளார்.

தலைமைச் செயலாளர்களே நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லையெனில், அவர்கள் கீழ் பணிபுரியும் பிற அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை எப்படி மதிப்பார்கள்? என்ற கேள்வியையும் நீதிபதி எழுப்பியுள்ளார். அதை எளிதாக விட முடியாது என்ற கருத்தையும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

சாதாரண மக்கள் தங்களது சட்ட ரீதியான உரிமைகள் பறிக்கப்படும்போது, நீதிமன்ற உத்தரவை மட்டுமே நம்பியுள்ள நிலையில், தலைமைச் செயலாளர்களே, சோம்பேறித்தனத்துடன், மக்களின் சட்ட உரிமைகளை மதிக்காமலும், நீதிமன்ற உத்தரவையும் துளியும் கருத்தில்கொள்ளாமல் அவமதித்து, அலட்சியமாக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

பல சமயங்களில், நீதிமன்ற உத்தரவை மதித்து உரிய காலத்திற்குள் பதிலை தாக்கல் செய்யாமல் இருப்பதும், அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் அல்லது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பின்னரே, மன்னிப்புடன் காலதாமதமாக பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றங்களில் முறையிடுவதும் வாடிக்கையாகிவிட்டது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜீன் 6, 2025 விசாரணையின்போது அளிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை செயலாளர்கள் இருவர் மீதும் தொடர முகாந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர்களின் பதில் மனுவை ஜுன் 20ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

ஏழை, எளிய மக்களின் சட்ட உரிமைகள் கூட வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவை பெற்றும்கூட, பயனாளிகள் அலைக்கழிக்கப்படும் போக்கு தமிழகத்தில் இருப்பதை எப்படி எற்றுக்கொள்ள முடியும்?

மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய அரசு அல்லது தலைமைச் செயலாளர்களே சட்டத்தை மதிக்காமல், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படுவதை என்னவென்று சொல்வது? நீதித்துறை தான் அதை உறுதிசெய்ய வேண்டும்.

நன்றி - சமூக செயற்பாட்டாளர் மருத்துவர். புகழேந்தி.